இதற்க்கு பதிலாக, டாஸ்மாக் கடைகளை உடைத்து இருக்கலாம்....தமிழனுக்கு அப்போதாவது தன்னிலை திரும்பும்.. ஏன் செய்யவில்லை?
2. பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி சரப்ஜித் சிங் - அந்நாட்டு அந்நாட்டு சிறையில் தாக்கப்பட்டு மரணமடைந்து விட்டார்..இதற்காக அவருக்கு வீரத்தியாகி பட்டம் மற்றும் அரசு மரியாதையோடு உடல் அடக்கம் என்றால் ..அவரை அந்நாட்டில் பயங்கரவாதம் செய்ய இந்திய அரசுதான் அனுப்பியதா?
3. 2002...இல் அன்புமணி ராமதாஸ் ஏதோ பேசியதாக இப்போது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிரார்கள்..பத்து வருடங்களாக என்ன புடுங்கிக்கொண்டிருந்தார்கள்?
4. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைந்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு அமைப்பினர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருபதாக இன்றுவரை தினத்தந்தியில் செய்தி வந்துகொண்டிருக்கிறது...இந்த அமைப்பினருக்கு இவ்வளவு நாள் கழித்துதான் அவர் மறைந்தது தெரியுமா?