"வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்று பீற்றிகொள்கிறார்கள் ...ஐபிஎல் போட்டியில் விளையாட வந்தவர்களை விரட்டுகிராரர்கள்...சுற்றுலா வந்தவர்களையும் விரட்டுகிறார்கள்.
"சாதாரண பசு மாடு புகார் செய்ததற்காக (?) சொந்த மகனையே தேர் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன்: பரம்பரை என்று மார்தட்டுகிறார்கள். ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்காக உலகமெங்கும் மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அலறுகிறார்கள் ..
"முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரை" என்று எக்காளமிடுவோர்தான் ...தானமாக கொடுத்த கச்சத்தீவை மீட்போம் என்று கூக்குரலிடுகிறார்கள்.
"கொடிகாத்த குமரனின் வாரிசுகள் தேசபற்றுமிக்கவர்கள் நாங்கள்" என்று ஏடுகளில் எழுதிவைத்துக்கொண்டு இந்தியாவில் பயங்கரவாதம் செய்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக "தேச துரோகம் செய்பவர்கள்தான்" தமிழர்களாம்.
வாழ்க தமிழ்பற்று வியாபாரம்.!!!