Pages

Tuesday, September 25, 2012

பில்லா II - என்ன எழவு படம்டா இது...?



நல்லவேளை இந்த படம் படுதோல்வி அடைந்து வந்த சுவடு இல்லாமல் போனது...
பொறுக்கிகளை, பயங்கரவாதிகளை, காமுகர்களை, தேச துரோகிகளை ஹீரோவாக்கும் முயற்ச்சியில் இப்படத்தின் முட்டாள் இயக்குனர் தோல்வி அடைந்து இருப்பது ஒரு விதத்தில் திருப்தியே..



விடுதலைப்புலிகளை உசுப்பேற்ற - ஒருவேளை அவன்களிடம் பிச்சை எடுத்து படம் எடுத்திருப்பான்களோ? - இந்த டுபாக்கூர் படத்தை ஏகப்பட்ட பில்ட் அப்புகளோடு வெளியிட்டு  மூக்குடை பட்டிருக்கிறார்கள்...
அகதியாக வரும் ஒரு ரவுடியிடம் , முகாமில் கேள்விகேட்கும் அதிகாரியிடம் திமிராக பதில் சொல்கிறான்...
என்ன வேலை பார்க்கிறாய் என்பதற்கு எதற்கு "மயிற புடுன்கிறேன்" என்று பதில் சொல்லவேண்டும்? இங்குள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை குஷிப்படுத்தவா?
அடுத்த அடுத்த காட்சிகளில் அவன் பெரிய தாதாவாக உருவகப்படுத்தபடுகிறான்..அவனுக்கு முந்தைய பில்லாவில் வந்த அல்லக்கையே துணையாக..

"நாங்க அகதிதான்..அநாதை இல்லை" இது ஒரு வசனமாம்..அகதி என்றாலே ஒரு நாட்டில் இருந்து அனாதையாக வருவதுதான்...இதில் என்ன திமிர்பெச்சு..அடாவடித்தனம்? இவர்கள் போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் இன்று குண்டுவெடிப்பும், போதை மருந்து கடத்தலும் பொறுக்கித்தனமும் அதிகமாகி, சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது...

"டேய் நான் பொறந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா" என்று வெத்து வசனம் பேசும் அந்த பொருக்கி ரவுடி என்ன மயிற செதுக்குனான்னு தெரியல...வர்றவன் போறவன எல்லாம் போட்டுதல்லினதுதான் தன்னோட வளர்ச்சிக்கு காரணம் என்றால் - வன்முறையை தூண்டும் இந்த படத்தோட டைரக்டர "குண்டர் சட்டத்துல" உள்ளே தள்ளுனாதான் என்ன? 
 இந்த ஆண்ட்டி தான் மாமா மாமா மாமா என்று ரவுடியை கொஞ்சி செத்து போகிறாள் 

முதிர்ச்சியான அத்தை மகள்..மாமா என்று அந்த ரவுடியை அழைப்பது அபத்தமாக இருக்கிறது..
"எனக்கு என்ன மாமா வாங்கிட்டு வந்தே " என்று கேட்கிறாள்...
"உனக்கு இதே வேலையாப்போச்சு..ஒவ்வொரு தடவையும் அவன் வரும்போது இப்படியே கேளு" என்று அவள் அம்மா இவளை திட்டுகிறாள்..
ஒரு அகதி - மாதத்திற்கு ஒருதடவை இங்கே அகதியாக வந்துவிட்டு செல்வானா? 

வர்றவன்  போறவனை எல்லாம் அந்த பொருக்கி அகதி போட்டு தள்ளுகிறான்.. ஆயிரம் பேர் சேர்ந்து ஆயிரக்கணக்கான துப்பாக்கியால் சுட்டாலும் ஒன்னும் புடுங்க முடியாது..இவன் கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு ஒரு கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு நடந்து கிட்டே இருப்பான்...என்ன ஹீரோயசம்டா இது...
ரெண்டு வார்த்தை தான் பேசுறான்..அதுக்கு இங்குள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் (காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவை) குதிக்கின்றன...போதாததற்கு, ஆபாச பத்திரிக்கைகள்தான்  வாங்கிய காசுக்கு அதிகமாக கூவுகின்றன என்றால் - பதிவுலக மேதாவிகளும் " தல - முண்டம் " என்று ஜால்ரா அடித்து தமது சினிமா விசுவாசத்தை காட்டுகின்றன..
எதிரியிடம் இருந்து லவட்டிக்கொண்டு வரப்பட்ட  ஆண்ட்டி - இவளும் க்ளோஸ் 
படத்தில் இன்னொரு கிழவியை எதிரியிடம் இருந்து லவட்டிக்கொண்டு வரும் ரவுடி அகதி, அவளை தனது அத்தை மகள் முன்பே கட்டி பிடித்து கொஞ்சுகிரார்ன், அவள் முன்பு இவளை கொஞ்சுகிறான்..நல்ல கலாசாரம்டா..
இரண்டரை மணி நேர படத்தில், ஆபாச பாட்டுக்கள் போக மற்ற நேரங்களில் யாரையாவது எவனாவது கொன்று போட்டுக்கொண்டே இருக்கிரானுங்கள்..டைரக்டரின் அற்புதமான கற்பனை வறட்சியை - படம் வருவதற்கு முன்பு என்னமாதிரி பில்ட் அப் கொடுத்துகிட்டு இருந்தான்?

படம் எடுக்கும்போது, ஒவ்வொரு நடிகநிடமும் " நீ இந்த காட்சியில சாகனும்" என்று சொல்லித்தான் கால்ஷீட்டே வங்கி இருப்பானுங்க போல இருக்கு...
கடைசியில - பொருக்கி அகதியை தவிர- சாகுறது  படம் பார்க்கும் முட்டாள் ரசிகனும்தான்...

நல்லவேளை இந்த படம் படுதோல்வி அடைந்து வந்த சுவடு இல்லாமல் போனது...

Monday, September 24, 2012

அடுத்த வருடம் முதல் ரோமிங் கால் ஃ பிரீயாமே?




இந்தியாவிற்குள் பேசுவதற்கு தற்சமயம் ரோமிங் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது..

வரும் 2013 ஆம் ஆண்டு அந்த கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய  தொலை தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார்.

இந்த இணைப்பை பார்க்கவும் 

Thursday, September 13, 2012

திரிப்பும் திணிப்பும் - ஊடக தந்திரம்....



செய்தி ஊடகங்கள் பெருக பெருக, வியாபார நோக்கம் முற்றிப்போய், செய்திகளுக்காக ஆளாய் பறக்கும் ஊடகங்கள் எந்த எழவு செய்தியாவது போட்டு பக்கங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன...

எத்தனையோ சமுதாய மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கையில், அவைகளை எல்லாம் இருட்டடிப்பு செய்திவிட்டு, ரோம் பற்றிக்கொண்டிருக்கையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனைப்போல,  சினிமா ஆபாச செய்திகளுக்கும், கிரிக்கெட் செய்திகளுக்கும் முக்கியத்துவம் (போல) செய்திகள் தந்து, முன் பக்கங்களில் ஆளும்  மற்றும் எதிர் கட்சிகளின் தனிநபர் தாக்குதலுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கின்றன...

தினமும் மின்சார பற்றாக்குறையால், அரசை குறை கூறிக்கொண்டிருக்கையில், மின் சார தேவைக்காக, கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இருக்கையில் சில அமெரிக்க அடிவருடிகள், கடைசி நேரத்தில் போராட்டம் என்ற  பெயரில் தங்களது சுய லாபத்துக்காக, மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பி - பரபரப்பூட்ட முனைகின்றன..
மின் பற்றாக்குரையைப்பற்றி குறை கூறி தலையங்கம் எழுதும் ஆபாச ஊடகங்கள், இதே அமெரிக்க கைக்கூலிகளை ஏதோ தியாகிகள் போல சித்தரித்து மக்களை பீதியூட்டுகின்றன.

எவன் தீக்குளிப்பான் அவன் வீட்டுக்கு சென்று விடுதலைப்புலிகளின் பணத்தை கொடுத்துவிட்டு  புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துவிட்டு வரலாம் என்று காத்திருக்கும் - விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளுக்கு இந்திய நலனுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் உடனேயே அங்கு சென்று ஓலமிட்டு வருவது வாடிக்கை..
வீரத் தமிழன்   செந்தமிழன் ,  பச்சைத்தமிழன்  என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் இந்த "டாஸ்மாக்" தமிழன், உண்மையிலேயே தமிழன் மீது அக்கறை இருந்தால் - பெப்சி, கோகா கோலா போன்ற விஷக்கிருமிகளுக்கு எதிராக களமிறங்கட்டும்..


எத்தனை விஞ்ஞானிகள் அணு உலை பற்றியா பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தாலும்,  இந்த உதயகுமார் குரூப்புக்கு அந்த செய்திகள் உரைக்காது..காரணம் அமெரிக்க விசுவாசம்..
இந்த விஷயத்தை ஊடகங்களும் மக்களுக்கு திரித்து திணிப்பது நயவஞ்சகம் என்பதைத்தவிர வேறு என்ன?

உதயகுமாருக்கும், நெடுமாறனுக்கும் , வைக்கோலுக்கும், கூத்தாடி சீமானுக்கும் இந்த அணு உலை பாதுகாப்புக்கு யார் வந்து உத்தரவாதம் தரணுமாம்? ஒபாமாவா இல்லை இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பிரபாகரனா? 

Thursday, September 6, 2012

இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!!

இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!!

இது எனக்கு ஆச்சரியத்தை அளித்ததது..நாம் பதிவர்களைப் பற்றி எவ்வளவு உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்... ஆனா இதை பார்க்கும்போது நமக்கே ஆச்சரியாமாக உள்ளது..

இந்த பதிவை பாருங்கள் தெரியும்....!!!!

Tuesday, September 4, 2012

ஆஹா..இதுவல்லவோ தமிழர் பண்பாடு....!!!


ந்தாரை வாழவைக்குமாம் தமிழ்நாடு..இது காலங்காலமாய் சுயபெருமை பேசும் தமிழர் கோஷங்களில் ஒன்று...

ரத யாத்திரை என்ற பெயரில் - இந்தியா முழுவதும் பெரும் கலவரங்களை தூண்டி, ஏராளமான் உயிர்களை குடித்த மதவெறியன் அத்வானி எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வரலாம்..அவர் வரும் வழியில் - சங்பரிவாரை திருப்தி படுத்தும் விதமாக வழியில் குண்டு கண்டுபிடிக்கப்படும், குண்டை வைத்தவர்கள்   ஏதாவது இஸ்லாமிய இயக்கத்தின் பெயர் சூட்டப்படும்...

குஜராத்தில் திட்டமிட்டு இஸ்லாமியர்களை கருவறுத்த மத வெறி மிருகம் பயங்கரவாதி நரேந்திர மோடி  தமிழ்நாட்டின் முதலமைச்சரின் நிரந்தர விருந்தாளி.. பல்வேறு வெளிநாடுகளில் விசா மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டாலும் - அடுத்த முதல்வன் என்ற அளவுக்கு தமிழ்நாட்டில் அவனுக்கு மரியாதை..

உலகமெங்கும் இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்கி அழித்து வரும் உலமகா பயங்கரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த யார் வந்தாலும், - அவர்கள் நமது நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களை அவர்ளது நாட்டில் வைத்து பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்ஹ்டினாலும் - நமது நாட்டுக்கு வந்தால் நமக்கெல்லாம் ஜென்ம சாபல்யம் கிட்டியதுபோல - அவர்களிடம் நமது நாட்டின் பாதுகாப்பையே ஒப்படைத்து சரணாகதி அடைகிறோம்..

ராஜீவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளுக்கு கைக்கூலிகளாக இருக்கும் "லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகளை" இன்னும் இங்கே சுதந்திரமாக உலாவ விடுகிறோம்..

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் இன்னும் ஐபிஎல்லின் பங்கேற்கும் பல அணிகளிலும் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகிறார்கள்....

ஆனால் இங்கே - கால்பந்து விளையாட்டு பயிற்ச்சிக்காக வந்த இலங்கை வீரர்களை விரட்டியடிக்கும் தமிழர் பண்பாடு எந்தவகயை சேர்ந்தது என்று விளங்கவில்லை..இப்படி செய்துவிட்டால் விடுதலைப்புலிகளுக்கு தனி நாடு கிடைத்துவிடுமா..?

டிஸ்கி...:

குஜராத்தில் பயங்கவாத செயல்களில் ஈடுபட்ட 32 பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பயங்கரவாத பிஜேபி ஆளும் கரநாடக மாநிலத்தில் 10  பேரை பிடித்து  தீவிரவாதிகள் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டம் என்றும் பரபரப்பூட்டுகிரார்கள்..

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஒழித்துக்கட்டுவதர்க்குதான் அமெரிக்காவை சேர்ந்த உதயகுமார், லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகள் வைகோ, நெடுமாறன் மற்றும் கூத்தாடி சீமான் இருக்கையில் இவர்களுக்கு ஏன் இந்த வேலை என்ற கேள்வி எழுகிறது...

இதையும் படியுங்கள்....