Pages

Friday, February 25, 2011

யார் ராஜதந்திரி? கருணாநிதியா? ஜெயலலிதாவா?

தமிழக சட்ட சபை தேர்தல் நெருங்க நெருங்க - எதிர்பாராத அல்லது (பழகிப் போனதால்) எதிரிபார்த்த சம்பவங்கள் நிறயவே சம்பவங்களும், கேலிக்கூத்துகளும், சந்திப்புகளும் நடைபெறுவதைக் காணலாம்.


சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாராலும் வெறுக்கப்பட்ட ஒரு கட்சி இருந்ததென்றால் அது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க தான்.

ஆரம்ப காலங்களில் மரங்களை வெட்டியே தமது கட்சியை வளர்த்த ராமதாஸ், அதன் பிறகு மரம் விட்டு மரம் தாவும் வானரம்போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலையை எடுக்க ஆரம்பித்தார்.

ஒரு தேர்தலில் அவருக்கு கருணாநிதி அண்ணனாகவும், அடுத்த தேர்தலில் ஜெயலலிதா சகோதரியாகவும் தென்படுவார்.

இவரது இந்த சந்தர்ப்பவாத அரசியலால் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பா.ம. க. இன்று கல்யாணப் பத்திரிகை கொடுக்கப்போய் தி.மு.க தலைவரிடம் 31 இடங்கள் பெற்று வந்து இருக்கிறது.

இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு சட்டசபைத்தேர்தல் என்று தொடர்ந்து கூட்டணி வைத்திருக்கும் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கும் நிலையில் - துரோகம் செய்துவிட்டு சென்ற பா.ம.க வுக்கு எந்தவித அவகாசமும் இல்லாமல் தொகுதிகள் பிரித்து கொண்டுத்து இருப்பது ஒரு ராஜதந்திரமாகுமா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக பெரும் நெருக்கடிகளை சந்தித்துவரும் கருணாநிதிக்கு காங்கிரசின் கூட்டணி உண்டா இல்லையா என்று குழப்பத்தின் காரணமாக, ராமதாசை தன்னுடன் வைத்துகொள்ள முடிவெடுத்ததில் முட்டாள்தனமான விளைவே இந்த அவசர தொகுதிப் பங்கீடு.

அதுபோல விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் தமிழக நலனைத்தவிர்த்து, தமிழீழ ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கான பகிங்கரமான ஆதரவாளர்கள்.

இவர்களுடன் கூட்டணிவைக்கும் திமுகவுடன் காங்கிரஸ் சேருமா எனபது சந்தேகமே. அப்படி சேர்ந்தாலும் அதுவும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியே.

அப்புறம் அதிமுக..

இந்தியாவின் நலனினோ, தமிகத்தின் நலனிலோ சிறுதும் அக்கறை இல்லாத வைகோ என்பவனை அடிமையாக வைத்திருந்தாலும், ஜெயலலிதாவும் சாதுர்யமாக காங்கிரசின் கூட்டணியை விரும்புகிறார்.

அதேபோல கருணாநிதி போல அவசரகோலத்தில் முடிவெடுக்காமல், கூட்டணியை பலமாக்க விஜயகாந்த் போன்றோர்களுக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தகுதிக்கேற்ப தொகுதிகள் பங்கீடுகள் நடைபெறுகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக, சொகுசு பங்களாக்களில் ஒய்வு பெற்றும், வெறும் அறிக்கைப் போர்களை நடத்தியும் வந்த ஜெயலலிதா, இந்த ஐந்தாண்டு காலங்களில் அதிமுகவின் உண்மையான விசுவாசிகளாக இருந்த பலரை இழந்திருக்கிறார்.

அதையெல்லாம் கடந்து வெற்றிபெற பலமான கூட்டணி அமைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுவரை தனித்து ஆட்சி என்று முழங்கி வந்த விஜயகாந்த், தற்சமயம் சோர்ந்துபோய், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பது அவரது நம்பகத்தன்மைக்கு விழுந்த ஒரு கரும்புள்ளிதான்.

குடிகாரன் என்றும் இந்த ஜெயலலிதாவால் வர்ணிக்கப்பட்ட இந்த தன்மானத் தமிழன் சீட்டுக்களுக்காகவும், தமது கட்சியை தக்கவைத்துக்கொள்வதர்காகவும் இவ்வளவுதூரம் கீழே இறங்கி வந்திருப்பது - எல்லாராலும் வித்தியாசமான அரசியலை தருவார் என்ற நம்பிக்கையை தகர வைத்துவிட்டது.

திமுக கூட்டணியிலிருந்து விலகவும் முடியாது அதே சமயம் அவர்களை மிரட்டியும் வைக்க வேண்டும் என்ற இரட்டை நிலைப்பாடுடன், ராஜா கைது, கலைஞர் டி வி ரெய்டு போன்ற மிரட்டல்களை கையாண்டு அதிக சீட்டுகளைப் பெற முயல்கிறது காங்கிரஸ்.

இவரகளது இந்த அரசியல் விளையாட்டுக்களை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது.

இதில் யார் ராஜதந்திரி என்பதை விட, ஓட்டளிக்கப் போகும் நாம்தான் சிறந்த ராஜதந்திரி என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

அதைவிடுத்து, காசுக்கும், குவாட்டருக்கும் ஓட்டுப் போடும் பொறுக்கிகள் மட்டுமே ஓட்டுப் போட்டால், அரபு நாடுகளைப் போன்ற எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே நல்லதொரு அரசு உருவாகும்..





Wednesday, February 23, 2011

பஸ் தினமா...பன்னாடைகள் தினமா?


நேற்றைய தினம் - சென்னை போலிசாரின் தடையையும் மீறி,  பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், பஸ் தினம் என்ற பெயரில் கூத்தடித்திருக்கின்றார்கள்..

பஸ் தினம் எதற்கு கொண்டாடப் படுகிறது? அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ..

ரவுடித்தனம் செய்வதற்கும், அடாவடித்தனம் செய்வதற்கும்தான் பஸ் தினம் என்ற பெயரில் அராஜகம் செய்து வருகின்றனர்.

சாதாரண நாளிலேயே பஸ்களின் படிக்கட்டுகளிலும் மேற்கூரையிலும் அபாயகரமான முறையில் பயணிக்கும் இவர்கள், பஸ் தினம் என்ற பெயரில், பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் படாதபாடு படுத்திவிடுகின்றனர். அதுமட்டுமல்ல அன்று பயணிக்கும் பயணிகளுக்கும் கடும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

பஸ்ஸின் மேற்கூரையில் நின்றுகொண்டு விசிலடித்துக்கொண்டு கூத்தடிப்பது, சாலையில் பஸ்ஸை நிறுத்திவைத்துக்கொண்டு பொறுக்கித்தனமாக நடனமாடுவது என்று அநியாயமாகக் கூத்தடிப்பது இதுதான் பஸ் தினத்தின் லட்சணம்.

இதுபோன்ற போருக்கித்தனங்களுக்கு திராவிட கட்சிகளும் - ஆபாச பத்திரிக்கைகளும்தான் காரணம்.

மாணவாகள் நினைத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று தங்கள் தேவைகளை அவர்கள் சாதித்துக் கொண்டதுதான் காரணம்.

மாணவர்கள் என்ற பெயரில் அவர்கள் கிழிப்பது என்ன?

சக மாணவர்கள் சந்தித்துகொண்டால் அவர்கள் பேசிக்கொள்வது இந்தியாவின் பொருளாதரத்தை வளமாக்குவது பற்றியும், ஆட்சியாளர்களின் அநியாயங்களைப் பற்றியுமா பேசிக்கொள்கிறார்கள்?

பிகர் மடிப்பது எப்படி? அபிமான நடிகனின் அடுத்தப் படம் பற்றி பேசுவது , அவனுக்கு ஜோடியாக நடிப்பவளின் உடலமைப்பு பற்றி பற்றி பேசுவது , பான்பராக் போட்டு சாலையில் துப்புவது, தம் அடிப்பது இப்படித்தான் அவர்கள் தங்களது மாணவப் பருவத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியிலும் சாதனை செய்கிறோம் என்ற பெயரில், சினிமா பாடல்களுக்கு ஆபாச நடனமும், அருவருக்கத்தக்க பாடல்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்..

தேவையற்ற விசயங்களுக்கெல்லாம், ஸ்ட்ரைக் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்வது, சாலையில் செல்லும் பஸ்களை மரிப்பது, கல்லெறிந்து பஸ் கண்ணாடிகளை உடைப்பது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது இதுதான் இவர்களது வேலை.

நடுரோட்டில் ஆபாசக் கூத்தடித்தவர்களை களைந்து போகச்சொன்னால் கல்லூரி வாசலில் நின்றுகொண்டு போலிஸ் அராஜகம் ஒழிகன்னு கோசம் போடுகிறார்கள்..

யார் அராஜகம் செய்கிறார்கள் என்று அறியக்கூடாத அளவுக்கு முட்டாள்களாக இருப்பவர்கள் எப்படி மாணவர்களாவார்கள்? அவர்களால் எப்படி இந்த நாடு உருப்படும்?

பஸ் தினம் என்று கொண்டாடுகிறார்களே, அந்த பஸ்சுக்கு என்ன தெரியும்? இவன் நமக்காகதான் இந்த விழா கொண்டாடுகிறான் என்று தெரிந்து அவன ஒழுங்கா காலேஜ் கொண்டுபோய் சேர்க்குமா?


இல்லை வேறு யாருக்காக இந்த பஸ் தினம்?

இவர்கள் காலித்தனம் செய்வதற்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களின் நேரத்தையும், அவர்களுக்கு சிரமத்தையும் கொடுப்பது மட்டுமல்லாமல், பொது சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கிறானே?

இவன்தான் நாளைய இந்தியாவா? நாளைய எதிர்காலமா?
மாணவன் என்றால் ஒரு நாகரீகம் வேண்டாம்? இன்றைய மாணவர்கள் எனப்படுவோர், ரவுடியிசம் செய்வதைத்தான் - ரவுடியைப் போல் பேசுவதுதான் - மாணவனுக்கான அடையாளம் என்பதுபோல செயல்பட்டு வருகிறார்கள்..

எல்லா ரவுடித்தனமும் செய்துவிட்டு மாணவன் என்ற பெயரில் தண்டனைகளில் இருந்து தப்பி விடுகின்றனர்.

பஸ் தினம் இன்னும் என்னன்னவோ கழிசடை தினம் என்று கூத்தடிக்கும் இவர்களை போலிஸ் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டும் போதாது, பத்திரிக்கைகளும், மக்களும் இவர்களுக்கு துளி கூட ஆதரவு வழங்கக்கூடாது.

Tuesday, February 22, 2011

இன்றைய நாளிதழ்....



20/02/2011 - தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் - "இன்றைய நாளிதழ்" என்றொரு தினப்பத்திரிக்கை வெளியீட்டுவிழா சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராஜர் (வெள்ளைக்காரனை விரட்டிவிட்டு - அவன் கொடுத்த பட்டங்களை பெயருடன் சேர்த்து பெருமையடிப்பதிலும், அவரகளது சிலைகளை பாதுகாத்து பெருமையடிப்பதிலும் தமிழனுக்கு நிகர் தமிழனேதான்) கலையரங்கத்தில் நடைபெற்றது..

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் நானும் கலந்துகொள்வதற்காக சென்றேன்..சர் பிட்டி தியாகராஜர் கலையரங்கம் முகவரி கண்டுபிடிப்பது சிரமம் என்றுதான் எண்ணி இருந்தேன்...ஆனால் அதற்க்கு வேலையே வைக்காமல், சங்கத்தலைவரை - விடிவெள்ளியே , வழிகாட்டியே என்று புகழ்ந்து அரசியல்வாதிகளுக்கு வைப்பதுபோல வழி நெடுகும் கட்அவுட்களைவைத்து நமக்கு சிரமம் கொடுக்காமல் சுலபமாக வழிகாட்டி விட்டார்கள்..

அப்போதுதான் நினைத்துக் கொண்டேன்..ஏதாவது ஒரு சங்கம் நாமும் ஆரம்பித்து அதற்கு கொஞ்ச காலம் தலைவனாக இருக்கவேண்டும் என்று..ஹ்ம்ம் வேறு எப்படி பிரபலமாகுவதாம்?

சரி மேட்டருக்கு வருவோம்..போனவுடன் நல்ல கவனிப்புதான். ஆளுக்கொரு பேட்ஜ் கொடுத்தார்கள். அப்புறம் டிபன் காபி போன்றவைகள்..பிறகு கலைநிகழ்ச்சி என்ற பெயரில் பள்ளிகூட சிறுமிகளை பாரத நாட்டியம் என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு நடனம் ஆட வைத்தார்கள்..

விழா ஆரம்பிபதற்கு முன்னமே - மேடையில் ஒருவர் கருப்புக்கண்ணாடி போட்டு தனியாக அமர்ந்திருந்தார்..எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று ரொம்ப நேரம் குழப்பமாக இருந்தது..அப்புறம் விழா நோட்டிசை பார்த்த பின்புதான் அவர் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜேப்பியார் என்று தெரிந்தது..அவர் ஏன் அவ்வளவு சீக்கிரம் வந்தார்?

பிறகு ஜெயலலிதாவின் ஜால்ரா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன், - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி தங்கபாலு, நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ், போன்றோர் மேடைக்கு ஒவ்வொருவராக வந்தார்கள்.

பிறகு பத்திரிகை வெளியீட்டு விழாவிற்காக முதலில் குத்துவிளக்கு ஏற்றினார்கள்...சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், அகில இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான திரு ஜி.என்.ரே, அவரது துணைவி திருமதி ரே ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற, அதைத்தொடர்ந்து மற்றவர்கள் விளக்கை பற்றவைக்க, ஏனோ நடிகர் பாக்யராஜை யாரும் கண்டுகொள்ளவில்லை..

முதல் பிரதியை திரு ஜி.என் ரே வெளியிட - கே. வி தங்கபாலு பெற்றுக் கொண்டார். ஜி.என் ரே அவருக்கு தமிழ் தெரியாததால் ரொம்ப நேரம் பத்திரிக்கையை பார்வையாளர்களுக்கு காட்டிக்கொண்டே இருந்தார். தங்கபாலுவும் தன்னிடம் தருவார் என்று காத்து இருது, கடைசியாக பெற்றுக்கொண்டார்.

"இன்றைய நாளிதழ்" முதல் பிரதியை தங்கபாலு ரூபாய் ஆயிரம் கொடுத்து பெற்றுக்கொள்ள, ஜேப்பியார் இன்னொரு பத்திரிக்கைய ரூபாய் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார். நாங்களெல்லாம் அதன் அசல் விலையான ரூபாய் இரண்டு மட்டும் கொடுத்து வாங்கிக்கொண்டோம்.

ஜேப்பியார் பத்தாயிரம் கொடுத்துவாங்கியதர்க்கு - தினமும் இதுபோல் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று டைமிங் காமெடி செய்தார் அதன் ஆசிரியர் திரு ரவீந்திரதாஸ்.

நடிகர் பாக்கியராஜ் வருடசந்தாவான ருபாய் எழுநூறு செலுத்தி சந்தாதாரர் ஆகினார்.

இதற்கிடையே வந்தார் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் - திருமாவளவன்.

மேடையில் பேசிய அனைவரும் பத்திரிகை தொழிலின் கஷ்டங்களை எடுத்துரைத்தனர்.

பாக்யராஜ் வழக்கம்போல - குட்டி குட்டி கதைகளின் மூலம் நகைச்சுவையாக பேசினார்.

இக்காலப் பத்தரிக்கைகள் சினிமாக்கள் பற்றியும் ஆபாசமாகவும் வருவதைப் பற்றியும் பேசிய பத்திரிக்கையின் ஆசிரியர், டி. ரவீந்திரதாஸ், அதற்க்கு மாற்றாக இந்த பத்திரிகை வெளிவரும் என்றார்.

- அவரை ஆசிரியராகக் கொண்ட - தமிழ் நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க மாத இதழான " தமிழ் தென்றல் " எப்போதும் பழைய நடிகர் நடிகைகளின் புகழ்பாடியே வரும்..ஹ்ம்ம் இது எப்படி இருக்கப் போகிறதோ..?

முதல் பத்திரிகையில் முதல் பக்கத்தில் -" 70 இடம் கேட்கிறது காங்கிரஸ் - கூட்டணியில் இழுபறி " என்ற தலைப்பில் வெளியான செய்தியை மேடையிலேயே மறுத்தார் தங்கபாலு. " நாங்கள் தி மு க கூட்டணியில்தான் இருக்கிறோம், இன்றுதான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது" என்றும் சொன்னார்.

முன்னதாக பேசிய டி. ரவீந்திரதாஸ், இந்த பத்திரிகை, எகிப்து, துனிசியா, போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிபோல இன்னுமொரு புரட்சி இந்தியாவிலும் வர இந்த பத்திக்கைமூலம், ஏற்படலாம் எனபது போல பேசியதற்கு,

"இந்தியாவில் அத்தகைய புரட்சியை - 100 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளைக்காரனை எதிர்த்து காங்கிரஸ் செய்துவிட்டது, அதன் தாக்கம்தான் இப்போது எகிப்திலும் மற்ற அராபிய நாடுகளிலும் பரவியுள்ளது" என்று புத்திசாலித்தனமாக சமாளித்தார்.

அதேபோல கூட்டணி பற்றிய செய்திக்கு மேடையிலேயே மறுப்பு தெரிவித்த திருமாவளவன், "எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை - நாங்கள்தான் தெளிவாக இருக்கிறோம் - ஏற்கனவே அ.தி. மு க வுடன் அக்ரீமென்ட் போட்ட (புதிய தமிழகம்) ஒருவர் இரண்டு இடங்கள் போதாதும் ஒன்பது இடங்கள் வேண்டும் என்கிறார்..அங்கே சேருவாரா இங்கே சேருவாரா என்று குழப்பிக் கொண்டிருந்தவர் (பா.ம.க) கல்யானத்திருக்கு அழைக்க சென்றும் ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்துவிட்டார்" என்றும் குறிப்பிட்டார்.

மற்றபடி அவரவர் தங்களைப் பற்றி புகழும் ஒரு மேடையாகத்தான் இருந்தது..

இன்றைய நாளிதழின் அன்றைய நாளிதழ் மட்டுமே பார்த்தேன்..தொடர்ந்து அதன் தரத்தைப் பாப்போம்..



Saturday, February 19, 2011

சோனியாவின் மறுமணமும் ரஜினி கேட்ட கேரியர் சாப்பாடும்..

மேற்கண்ட இந்த தலைப்பு ஹிட்சுக்காக மட்டுமின்றி..இன்னும் நிறையபேர் பாரக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியதுதான்.

இதை மறைக்கவேண்டிய அவசியம் இல்லை.

அதிகமானோர் பார்க்கவேண்டும், நமது எண்ணங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே இதை நாம் எழுதுகிறோம்.

ஏனென்றால் இந்தகால தமிழ் பத்திரிக்கைகள் தமது விற்பனையை அதிகரிக்க இது போன்ற கேவலமான செய்திகளே அதிகம் வெளியிடுகின்றன.

வலைப்பதிவில் இந்த ஆபாசத் தலைப்பை போட்டுவிட்டு உள்ளே நமது கருத்துக்களை எழுதுகிறோம்.

ஆனால் குமுதம், ஆனந்த விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர், ஜூனியர் விகடன் போன்ற ஆபாசப் பத்திரிக்கைகள் இதையே தொழிலாக செய்து வருகின்றன.

சோனியா அகர்வால் என்றொரு நடிகை. ஒரு சினிமா இயக்குனரை மணம் செய்து விவாகரத்தும் செய்துவிட்டாள்.

அவள் மறுமணம் செய்வாளா, அல்லது தனியாக வசிப்பாளா என்று இவனுக்கு என்ன அக்கறை?

நடிகைகளுடன் ஒருநாளாவது படுத்துவிட வேண்டும் என்று அலைவோருக்கு இது போன்ற செய்திகளை இவன் மறைமுகமாக தெரிவித்து மாமா வேலைபார்கின்றான்.

இதே செல்வராகவனின் மறுமண நிச்சயதார்த்தத்திற்கு வந்த ஒரு நடிகன் ரஜினி. அவனுக்கு என்ன அவசரமோ..சாப்பாட்டை கேரியரில் அனுப்ப சொன்னானாம்? இது சாதாரண கூலித் தொழிலாளிகூட பார்சல் சாப்பாடு வாங்கிபோவான்.

இதில் என்ன அதிசயம்?

இந்த கேவலமான பத்திரிக்கைகளின் மாமா வியாபாரம் பற்றி ஒரு நண்பர் அனுப்பிய பதிவு கீழே..


எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். இந்தப் புலனாய்வு பத்திரிக்கைகள், (எதைப் புலனாய்வு செய்கின்றன என பிறகு பார்ப்போம்) என்ன சமூக அவலங்களைப் புலனாய்வு செய்து கிழிக்கின்றன என்று. நானும், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ஜூனியர் விகடன் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். புலனாய்வு செய்கிறேன் பேர்வழி என பெண்களின் புலன்களை ஆயும், புலனாய்வு வேலையில் ஈடுபட்டுள்ளன இந்தப் பத்திரிக்கைகள். ஜூனியர் விகடன் எனப் பெயர் வைத்திருந்தாலும், இந்தப் புலன் ஆய்வு வேலைகளில் ஜூனியர் விகடன் தான் சீனியர்.

சில வாரம்களுக்கு முன்பு 'பாழாகும் பாடி' என்ற செய்தி வெளியாகியிருந்தது. அதாவது பாடி, போரூர் ஆகிய இடங்களில் போலீசு துணையுடன் விபச்சாரம் நடப்பதாகவும், அதனால் பொது மக்களுக்கு அசிங்கமான பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் எழுதியிருந்தனர். அந்த செய்தியை முழுதாய் படித்தால், "பசங்களா... சென்னைல எங்க விபச்சாரம் நடக்குதுனு தேடி அலையாதீங்க, போரூர்லயும், பாடிலயும் நல்லா நடக்குது"னு அறிவிப்பது போல் இருந்தது. சரி, அதை விடுங்கள். அதைவிடக் கொடுமை, அந்த செய்திக்கு அவர்கள் வெளியிட்டிருந்தப் படம் தான். முக்கால் பக்கத்துக்கு, கால்வாசி உடையுடன் நிற்கும் ஒரு பெண்ணின் படம்.

சரி செய்திக்குதான் படம் இப்படியென்றால், அந்தச் செய்தியின் முந்தையப் பக்கமான நடுப்பக்கத்தில் அரை நிர்வாணமாய் நிற்கும் நடிகையின் படம்!!!!



எதற்கு இப்படியொரு அரைகுறை படம்? விடலைப் பையன்களும், இன்னும் சிலரும் அந்தப் படத்தைப் பார்த்து பத்திரிக்கையை வாங்குவதற்காகத் தானே? அடப் பாவிகளா, இதைத்தானே அந்த போரூர் மற்றும் பாடி ஏரியாக்களின் மாமாக்களும் செய்கிறார்கள்? விபச்சாரம் செய்யும் பெண்ணைக் காண்பித்து தொழிலுக்கு அழைக்கிறார்கள். அவர்களுக்கும் ஜூனியர் விகடனுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களாவது வயிற்று பிழைப்புக்கு செய்கிறார்கள். ஆனால் விகடனோ அதே வேலையை, சில பிரதிகள் அதிகம் விற்க வேண்டி செய்கிறது. சொல்லப்போனால் ஜூனியர் விகடன் 'அந்த' தொழில் செய்பவர்களைவிட இன்னும் மோசம்.



பாடியிலும், போரூரிலும் விபச்சாரம் நடக்கிறது குடும்பப் பெண்கள் நடமாட முடியவில்லை. குடும்பத்துடன் வெளியே செல்ல முடியவில்லை என்றெல்லாம் மக்கள் புலம்புவதாய் செய்தி வெளியிட்டிருக்கும் விகடனுக்கு சில கேள்விகள். "உங்கள் ஜூனியர் விகடனை, குடும்பத்தை அருகில் வைத்துக் கொண்டு படிக்க முடியுமா? எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் நீங்கள் செய்யும் 'பெண் புலன் ஆய்வு'தான் தென்படுகிறது.

போரூர், பாடி போன்ற இடங்களை விபச்சாரம் செய்பவர்கள் கெடுக்கிறார்கள் என புலம்பியிருக்கிறீரே, பத்திரிக்கை ஊடகத்தை ஏதோ ஷகீலா படம் போல் மாற்றும் உங்களை எவன் தட்டிக் கேட்பது?

போலீசையும், விபச்சாரிகளையும், மாமாக்களையும் குறை சொல்லவும், திட்டவும் உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இந்தப் பதிவுக்கு நான், "விபச்சாரம் செய்யும் விகடன்" எனப் பெயர் வைத்ததில் என்ன தப்பு இருக்கிறது?



நான் 'ஒரு' செய்தியை உதாரணமாய் காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் இருமுறை வரும் இதுபோன்ற இதழ்களில், பலமுறை அசிங்கங்கள் நடக்கின்றன. ஜூவியில் மட்டுமல்ல. அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஈடுபட்டிருப்பது புலன்களை ஆய்வதில் தான். நக்கீரன் இதற்கு கொஞ்சமும் சலைத்ததள்ள. நித்தியா நந்தா விவகாரத்தில் ஆபாஸகாட்ச்சிகளை விவரமாக பார்க்க வேண்டும் என்றால் சந்தாதார்ர் ஆகுங்கள் என்று கடைவிரித்த்தை அனைவரும் பார்த்தோம்தானே. எனவே இவர்கள் புலன் ஆய்வு செய்வதை விட சதை ஆய்வு வியாபாரம் செய்வதுதான் அதிகம்.


இப்போது தெரிகிறதா இந்த பத்திரிக்கைகள் ஜன நாயகத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றன என்று?
 

Thursday, February 17, 2011

"கனிமொழி கைது" - நாடகம் நடக்கிறது..


இன்றைய அனைத்துப் பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தி, "கனிமொழி கைது" என்பதுதான்.

பார்கிறவன் எல்லாம் ஏதோ ஸ்பெக்ட்ரம் விசயத்தில் இவர் பெயர் அடிபட்டதே..அதனால்தான் கைது செய்து இருப்பார்களோ என்றுதான் நினைத்திருப்பான்..

ஆனால் கனிமொழி கைது செய்யப் பட்டது - இலங்கையில் கைதாகி இருக்கும் 109 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தடையை மீறி நடைபெற்ற ஒரு சிறு ஆர்பாட்டத்திற்காக.

இந்த கைது செய்யபடுவதினால் எந்தவித பாதிப்பும் இல்லை..அவர்களை வேனில் ஏற்றி, ஒரு மண்டபத்தில் வைத்து சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிடுவார்கள்..இதை இந்த பத்திரிக்கைகள் அனைத்தும் இவ்வளவு பெரிதுபடுத்துவானேன்..

நிச்சயமாக இதில் வியாபாரத்தந்திரம் மட்டும் இல்லை..

அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது..



தேர்தல் நெருங்குகிறது..

ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழகத்தின் ஆளும் கட்சியான தி மு கவின் கழுத்துக்கு கத்தியாக மேலே தொங்கிக்கொண்டிருக்கிறது..

இப்போது இவர்களுக்கு தமிழக மீனவர்களின் மீது அனுதாபம் வராமல் என்ன செய்யும்...

இவர்களுக்கு  ஓட்டு வேண்டும்..பத்திரிக்கைகளுக்கு காசு வேண்டும்...

நடிகை நடிகன் என்று கூத்தாடிகளின் ஆபாசப் படத்தைப்போட்டு விற்பவனுக்கு, மக்கள் எக்கேடுகெட்டால் என்ன...?



தமிழனுக்கு தமிழனே எதிரி என்று வசனம் பேசும் சினிமாக்கூத்தடிகளும் இப்போது தமிழனை விடுதலை செய் என்று கூத்தடிக்கின்றன..



மும்பையில் தமிழனை விரட்டுவதர்கேன்றே ஆரம்பிக்கப்பட்ட - பயங்கரவாத கட்சியான சிவா சேனாவின் தாய் கட்சியான இன்னொரு பயகரவாத கட்சி - பார "தீய" ஜனதா குண்டன்களும் போராட்டம் என்கிறான்..

எல்லாம் ஓட்டுப் பிச்சைக்கான ஒத்திகைகள்தான் .


இலங்கை நமது அண்டைய நாடு..

அங்கே விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் எப்போதும் உண்டு..

எல்லை மீறுகிரவனை பிடிக்கத்தான் செய்வான்..

இந்த வேஷதாரிகள் இங்கே குதித்தவுடன் விடுதலை செய்து விடுவானா?

தவறு எங்கே என்று ஆராய வேண்டும்

நாம் எவ்வளவு கூச்சலிட்டும் இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும் கடலோர எல்லைகளில் தாக்கியும் வருவது ஏன்?

நாம் ஒருதலைப் பட்சமாக, மீனவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றும் , இலங்கை ராணுவம், தவறு செய்வதற்காக மட்டுமே இருக்கிறது என்பதுபோல் கூக்குரலிட்டுக் கொண்டிருக்காமல்,

நாமும் எல்லைக் கட்டுப்பாட்டை மதித்து நடந்தால் இதுபோன்ற துன்பங்கள் நிகழாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

இங்கே அரசியல்வாதிகளும், சினிமாக்கூத்தடிகளும் தங்கள் சுயநலத்துக்காக இங்கே குதித்துக்கொண்டும், கூச்சலிட்டுவிட்டும், பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஏ சி காரில் வீட்டுக்கு சென்று ஜாலியாக இருந்து விடுவான்.

அரசியல்வாதியின் வேலைகள் எல்லாம், அடுத்த தேர்தல் வரைக்கும், சிநிமாக்கூத்தாடியின் கூச்சல் எல்லாம் தங்கள் படம் வெளியாகும்போது மட்டும்தான்.



Wednesday, February 16, 2011

திரிஷாவுக்கு அஜீத் போட்ட பிரியாணி..


போர்த் எஸ்டேட்..அப்படீன்னா என்ன தெரியுமா? நான்காவது தூண்...அதாவது இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் நான்காவது தூணாக  பத்திரிக்கைகள் விளங்குகின்றன என்று சொல்வார்கள்..

இந்தக்கால பத்திரிக்கைகளின் லட்சணம் தான் மேலே சொன்ன தலைப்பு...திரிஷாவுக்கு அஜீத் போட்ட பிரியாணி..அப்படீன்னு குங்குமம் பத்திரிக்கைல ஒரு தலைப்பு..

ஊருல எவ்வளவோ பிரச்சினை இருக்கு, இந்த நாதாரிங்க அஜீத் திரிஷாவுக்கு பிரியாணி போட்டான், அது போட்டான் இது போட்டான்னு கேவலமான ஆபாச வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்குதுங்க..

அடேய்..பிச்சைக்காரன்க்கு கூட பிரியாணி போடுராங்கடா..இது ஒரு விசயமாடா?



ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது... - பிரதமர்..



ராசாவை தி மு கவின் விருப்பப்டி தான் அமைச்சர் ஆக்கினோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த விஷயம் தனக்கு தெரியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பெட்டியில் கூறியுள்ளார்.

ஒரு பிரதமர்..எல்லா துறைகளையும் கண்காணிக்கும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் இப்படி சொல்லி இருப்பது மிகவும் கேவலமாக உள்ளது...

அப்படியென்றால் ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து இருந்தால்..உதாரணமாக சென்ற ஆட்சியில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த பொது - ரயில்வே துறை மிகுந்த லாபம் ஈட்டியாதாக சொன்னார்கள்...அதை தமது அரசின் சாதனை என்று சொல்லாமல் அது எனக்கு தெரியாது என்று சொல்வாரா?

Tuesday, February 15, 2011

வெற்றிகரமான 365 வது நாள் !!!



நன்றி நன்றி நன்றி..

இது எந்த படத்திற்கான வெற்றிக்கான அறிவிப்பும் இல்லை

எந்த ஆட்சியின் சாதனைக்ககவும் இல்லை

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கிய நாட்ட்களின் கணக்கும் அல்ல

வனிதா விஜயகுமார் குடும்ப சண்டையின் நாட்கள் கணக்கும் அல்ல

எதுக்கு இதனை பீடிகை?...

மர்மயோகி என்கிற இந்த வலைப்பதிவை ஆரம்பித்து இன்றோடு சரியாக ஒரு வருஷம் முடிந்து விட்டது..

ஆதரவளித்தோருக்கும், விமர்சித்தோருக்கும் பின்தொடர்வோர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி..

ஏதோ விளையாட்டாக ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிவிட்டதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது..


தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள் பல..

Monday, February 14, 2011

யுத்தம் செய் - இன்னுமொரு "அஞ்சாதே"



எவ்வளவு திறமையான இயக்குனர் என்று பெயர் பெற்றாலும், எந்த இயக்குனரும் மூன்று படங்களுக்குமேல் தமது திறமையை தொடரமுடிவதில்லை...

இயக்குனர் மிஷ்கினும் அந்த வகையிலேயே வருகிறார்...

ஒரு இன்வெஸ்டிகேஷன் கதைதான்...

ஆனால் ஏறக்குறைய எல்லாக் காட்சிகளும் - ஏன் கதை அமைப்புகூட அவரது முந்தைய படமான "அஞ்சாதே" யை நினைவூட்டுவதை தவிர்க்கமுடியவில்லை..


ஊரில் உள்ள இளம்பெண்கள் காணாமல் போவது அஞ்சாதே படத்தின் கருதான்

பெண்கள் காரில் கடத்தப் படும் காட்சியும் அந்த படத்தில் காட்டப்படும் அதே டெக்னிக்தான்..

மொட்டைபோட்ட கொலைகாரனும் அதே படத்தில் வந்ததுதான்

வெட்டப்பட்ட கைகள் ஊரின் மையப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட காவல்துறை எல்லைக்குள் கிடப்பது - ராஜேஷ்குமார் நாவல்களை நினைவூட்டுகிறது..


ஊரின் மையப்பகுதியில் அட்டைப் பெட்டியில் வெட்டப்பட்ட கைகள், - மற்றும் அடிக்கடி இளம் பெண்கள் காணாமல்போவது
இந்த இரு வழக்குகளும் - சி பி சி ஐ டி அதிகாரி ஜே கே என்கிற - சேரனிடம் வருகிறது..ஏற்கனவே தனது தங்கையை இதே போல காணாமல் போய் வாடிக்கொண்டிருக்கும் அவர், இந்த வழக்கை துப்பறிந்து யார் இதற்கெல்லாம் காரணம் என்று கண்டு பிடிக்கிறார்..

பெண்களை கடத்தி, வயதான பணக்காரர்களுக்கு - ஆபாசக் காட்சி வைப்பது காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளே என்றும்,

காணாமல் போன சில பொறுக்கிகளின் கைகளை வெட்டி அட்டைப் பெட்டியில் வைப்பது இன்னொரு கும்பல் என்றும் கண்டுபிடிக்கும்போது - ஆரம்பத்தில் குழப்பமாகத் தெரிந்த சில சம்பவங்கள் ஒன்றோடொன்று இணையும்போது நமக்கு மிகத்தெளிவாக புரியும்படி காட்டி இருப்பது - நல்ல இயக்கம்தான்.


படத்தில் சண்டைக் காட்சிகள்கூட - அஞ்சாதேயை நினைவூட்டுகின்றன.

அஞ்சாதே படத்தில், ஆஸ்பத்திரியில் போலிஸ் அதிகாரி நரேனை அடிக்கவரும் வில்லன்கள் ஒவ்வொருவராக வந்து அடிபடுவார்கள்..

அதே போலத்தான் இதிலும் போலிஸ் அதிகாரி சேரனை அடிக்கவரும் பொறுக்கிகள் ஒவ்வொருவராக வந்து அடி வாங்குகிறார்கள்..

கதாநாயகனுக்கு ஜோடி இல்லாமல் காட்டி இருப்பதும் - படம் தரைப்படைகளுக்கான படம் இல்லை என்றாலும்,

ஒரு ஆபாச நடனம் - அமீர் - மிஷ்கினின் முன்னாள் நண்பர் சாருநிவேதிதா - வரும் காட்சி யாருக்கென்று தெரியவில்ல..

"வாள மீனுக்கும்" , "கத்தாழக் கண்ணால" போன்ற பாடல்கள் போல இந்த ஒரு பாடலும் (கன்னித்தீவு கண்ணா - கட்டழகு பெண்ணா ) ஒரு செண்டிமெண்டாக இருக்கலாம். திறமையை நம்புபவர்கள் ஏன் செண்டிமெண்டை விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை.



பெண்களைக் கடத்தி வந்து லைவ் செக்ஸ் ஷோ பார்பவர்களுக்கும், அதை செய்பவர்களுக்கும் நல்ல தண்டனையை சொல்லி இருக்கிறார்கள்..அந்த மாதிரி இந்த ஊரில் செய்தால் ஒரு பொறுக்கி நாய் கூட இருக்க மாட்டான்..ஆனால் அவனெல்லாம் அரசியல்வாதியாக இருக்கிறானே?



இந்த படத்திலும் சாராயம் முக்கிய பங்கு வகிக்கிறது...

ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் - போஸ்ட் மார்ட்டம் செய்யும் டாக்டர் வரும் காட்சி முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறார்..சுடப் பட்டு சாக இருக்கும்போது கூட குடித்துவிட்டு சாகிறார்....

இவங்களெல்லாம் திருந்தவேமாட்டான்கள் போல இருக்கிறது..



படம் முழுவதும் ஏதோ மஞ்சள் கலரிலேயே இருக்கிறது...மணிரத்னம் இருட்டில் எடுப்பதுபோல மிஷ்கின் மஞ்சளாக எடுப்பார் போல இருக்கிறது...என்னடா இது புது ட்ரெண்டா இருக்கு..?



சேரனும் மற்றும் படத்தில் வருபவர்களும் சரியாக பொருந்துகிறார்கள்..


ஒளிப்பதிவு, இசை, இயக்கத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் என்றாலும்  - யுத்தம் செய் - அஞ்சாதேயின் மறுபதிப்புதான் ..!



Saturday, February 12, 2011

தூங்காநகரம் - சாரயக்கடைகளுக்கான விளம்பரம்

படத்தின் ஆரம்பக் கட்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஏதோ வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள் என்று எண்ணவைத்து ஏமாற்றி விடுகிறார்கள்...


இருட்டுக்குள் கேமரா ஒவ்வொரு வீடாகப் புகுந்து ஒவ்வொரு வீட்டின் ரகசியங்களையும், பழக்க வழக்கங்களையும் போகிற போக்கில் சொல்லும்போது இது ஒரு மாறுபட்ட படம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது..அடுத்துவரும் காட்சிகள் நம் எண்ணத்தில் மண்ணைப் போட்டு புலம்ப வைத்து விடுகிறது...

மதுரையை சுற்றியுள்ள வெவ்வேறு ஊர்களில் இருந்து மதுரைக்கு வரும் நான்கு பேர் சாராயக் கடையில் சந்தித்து உயிர் நண்பர்களாகும் அரதபழசான ஆயிரத்தி நூற்றி சொச்சமான கதை..

மதுரையில் நடக்கும் கதைக் களம் என்றால் இப்படித்தான் என்று சில கேணத்தனமான படங்களில் இதுவும் ஒன்று..

நான்கு நண்பர்கள்..(நண்பர்கள் என்றால் நான்கு பேர் என்று எவன் கண்டு பிடித்தான்?) இருக்கவேண்டும்

அந்த நான்கு பேரும் ஷேவிங் செய்யாத தோற்றத்துடன் கசங்கிய சட்டையுடனும் அழுக்கு பேன்ட் அல்லது லுங்கியுடனும் பொறுக்கி மாதிரி தோற்றத்துடனும் இருக்கவேண்டும்..

டெய்லி சாராயக்கடையில்  குடித்துக் கொண்டிருக்க வேண்டும்

சாராயக் கடையில் ஒரு தடவையாவது பிரச்சினை பண்ணவேண்டும்

அதில் ஒருவனுக்குதான் காதலி இருக்கவேண்டும்

ஒன்றுமே இல்லாத காரணங்களுக்காககூட உயிரைக் கொடுப்பேன் என்று உறுதியுடன் இருக்க வேண்டும்...

மதுரையில் யாராலும் அசைக்க முடியாத ஒரு பயங்கர ரவுடி கும்பல் இருக்க வேண்டும்

அவர்களை இந்த நண்பர்கள் மட்டுமே எதிர்க்க - அல்லது அழிக்க முடியும்..

இப்படி எல்லா இலக்கணங்களும் இந்த படத்தில் உண்டு..



மணல் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்கும் ஒரு அதிகாரியின் மகளை நடு ரோட்டில் ரவுடி காரை ஏற்றிக் கொல்கிறான்...ப்ரேக் பைலியர் என்று அவனை நீதிபதி விடுதலை செய்கிறார்...



ஜவுளிக் கடையில் டிரெஸ்ஸிங் ரூமில் உடை மாற்றும் பெண்களை பின்னாடி இருந்துகொண்டு (இந்த படத்தில் உடை மாற்றும் பெண்களை எப்படி மொபைல் போனில் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொடுக்கிறான்) படம் பிடிக்கும் ரவுடிக்கூட்டம் அந்த பெண்களை ஆசைக்கு இணங்க வைக்கிறது..அப்படி மறுக்கும் ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள்..



இவ்வளவு அநியாயம் நடக்கும் அந்த ஊரில் போலீசையே காணோம்..ஏன் லஞ்சம் வாங்குவதற்கு கூட வருவதில்லை...



எல்லாவற்றையும் வில்லன்களே பார்த்துக் கொள்கிறார்கள்..

அருமையான டைரக்சன்..ஹ்ம்ம்ம்



இதேபோல ஒரு குருக்களின் மகளை படம் எடுத்து மிரட்டும் வில்லனின்  மகனை, இந்த நான்கு நண்பர்களும் குடிபோதையில் அடித்து குருடனாக்கி விடுகிறார்கள்...

இவர்களை கண்டுபிடித்து, வில்லனின் மகனை அடித்த அந்த நண்பர்களில் ஒருவனை ஒழிக்க, அந்த நண்பர்களில் மூன்று பேரையும் தனித்தனியாக மிரட்டி அவனை கொல்வதற்கு அனுப்பிவைப்பது வித்தியாசமான கற்பனைதான் என்றாலும், அந்த நண்பர்கள் உடனேய ஒப்புக் கொண்டு அவனை கொல்ல சம்மதிப்பது எப்படி என்றே தெரியவில்லை..நண்பரளுக்கான இலக்கணம் மீறப் பட்டிருக்கிறது..?



கடைசியில் வில்லனின் குருட்டு மகனை சாக்கில் கட்டி கொன்று விட்டு, அது கதாநாயகன்தான் என்று நம்பவைப்பது அசல் நாடகத்தனம்..

அந்த கதாநாயகன் வில்லனின் வீட்டுக்கே சென்று வசனம் பேசி அந்த வில்லனை கொல்வது 1930 ஆம் வருஷ டெக்னிக்..



தனது மகளை கார் ஏற்றி கொன்ற வில்லனை அதே போன்றே அந்த அதிகாரி கொன்று விட்டு - காரில் ப்ரேக் இல்லை என்று சொல்வது உச்சக் கட்ட காமெடி..

வடிவேலு இல்லாத குறையை போக்கும் ஒரு காமெடி இது..(படத்தில் வடிவேலு நட்புக்காக என்று ஒரு பாடல் காட்சியில் காண்பிக்கிறார்கள்..)



பேரழகி அஞ்சலி துடுக்குத்தனமாக வந்து - இருட்டுக்குள்ளே இருக்கும் படத்தை கொஞ்ச நேரம் வெளிச்சமாக வைக்க உபயோகப்படுகிறாள்..



தூங்கா நகரம் எனபது மதுரையை பெருமைப் படுத்தும் வார்த்தையாக தெரியவில்லை..

ஏனெனில் இரவு முழுதும் பாரில் குடித்துக் கொண்டிருப்பவர்களையே காட்டுவதால் இது மதுரையை கேவலப்படுத்தும் தலைப்பாகவே தெரிகிறது..



மற்றபடி படம் முழுவதும் ஒரே கூட்டம் கூட்டமாக ஆடுகிறார்கள்...திருவிழாவில் கூட்டமாக இருக்கிறது..பொறுக்கிகளும் ரவுடிகளும் டாட்டா சுமோவில் அலைகிறார்கள்..

படத்தில் அனைவரும் குடிகாரர்களாக சாராயக் கடைகளில் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

இது ரவுடிகளையும்., சாராயக் கடைகளையும் விளம்பரப்படுத்டுவதர்கான ஒரு படமே..




Thursday, February 3, 2011

ராசா - விண்ணிலிருந்து மண்ணுக்கு...!.



ராசா - இந்த பெயர் எது எதற்கோ பிரபலமாக இருந்தாலும், இன்று பெருமளவில் உச்சரிக்கப்படும் ஒரு பெயராகி விட்டது..

தி.மு.கவின் குடும்பத் தகராறு உச்சத்திற்கு வந்தபோது, தயாநிதி மாறனுக்கு பதிலாக தொலை தொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்தான் ராசா..

கருணாநிதியின் முழுமையான - உணமையான விசுவாசி..இன்னும் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோரின் குடும்பத்திருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக கருதப்பட்டதால், 2 ஜி அலைவரிசை ஊழல் விஸ்வரூபம் எடுத்தபோது, கலைஞர் கருணாநிதியால் முழுதுமாக ஆதரிக்கப்பட்டவர்..

ஒரு தலித் சமுதாயத்திலிருந்து, மத்திய அமைச்சராகப் பதவியேற்ற ராசா, இன்று சி. பி. ஐ - யால் கைது செய்யப்பட்டு, குற்றவாளியாக நிற்கிறார்.

குற்றவாளி யார் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்..

ராசா ஒரு கருவிதான்...அவர் ஒரு பலியாடு...

இதோ, ராசாவின் கைது - திமுக, காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காது என்று அவசர அவசரமாக ஒரு அறிக்கை - எதற்கு?

கூட்டுக் களவாணிகள் பிரிந்தால் நாறிவிடுமே ...

எப்படியோ - எப்படி இருந்தாலும் ஒருவன், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு ராசாவே ஒரு உதாரணம்.



இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி


உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்  வழக்கமுடைய ஒரு துரோகி ஒருவன் வாழ்ந்து வந்தான்.

தான் வேலை செய்த கம்பெனி முதலாளியை கூலிப் படையினரை வைத்து கொலை செய்ய முயற்சி செய்து, அந்த கம்பெனியை அபகரிக்க முயற்சி செய்த துரோகத்திற்காக கம்பெனியை விட்டே விரட்டப்பட்டவன் அவன்.

அந்த நிறுவனத்தை விட்டு விரட்டப்பட்டாலும், தெருவோரமாக நின்றுகொண்டு, அதோ அந்த கம்பெனி என்னுடையது, இதோ இந்த சொத்து என்னுடையது, நான்தான் இதற்க்கு முதலாளி என்று பைத்தியக்காரனாக உளறிக்கொண்டிருந்தான் அவன்..

இந்த துரோகியையும் நம்பி சிலர் அவன்கூட சென்று தனியாக கம்பெனி ஒன்று ஆரம்பித்தனர்.

இந்த துரோகியின் முன்னாள் முதலாளியின் போட்டியாளரான இன்னொரு கம்பெனி முதலாளியான பெண் ஒருவர், கூலி படையின் பயங்கர எதிரி. ஆனாலும் தன் எதிரி கம்பெனியை வீழ்த்துவதற்காக இந்த துரோகியை தனது அடிமையாக வைத்துக் கொண்டார்.

இந்த துரோகி, இந்த பெண் முதலாளிக்கும் அடிமையாகவும், அதே சமயம், கூலிப்படையினர் கொள்ளையடித்து வரும் பணத்துக்காக இருவருக்கும் அடிமையாக வேலைப்பார்த்து வந்தான்..

யாரிடம் பிச்சை எடுத்தாலும் கூலிப் படையினருக்கு மட்டுமே ஆதரவாக பேசும் குணம் உள்ளவன் இந்த துரோகி..

இவனுடைய இந்த கேவலமான பிழைப்பை பார்த்து வெறுத்துப் போய் இவனை நம்பி இவனுடன் வந்தவர்கள் மீண்டும் தமது பழைய கம்பெனிக்கே திரும்பி சென்றனர்.

இப்போது தனியொரு அடிமையாக கம்பெனியை நடத்தி வரும் அவன், தன்னைத்தானே கம்பெனியின் முதலாளி என்று அறிவித்துக் கொண்டதோடு, தனக்கு யாரும் போட்டியில்லாததால் தானே மீண்டும் முதலாளியாக தேர்ந்தெடுக்கப் பட்டதாக சொல்லிக்கொள்கிறான்.

ஏற்கனவே இவன் பழைய கம்பெனியை தனது கம்பெனி என்று பைத்தியக் காரத்தனமாக உளறியது எல்லாருக்கும் தெரிந்ததால் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நேற்றைய சன் டிவியில் வந்த ஒரு கேலிக்கூத்தான செய்தி.

உதவி செய்யும் இந்தியாவிற்கே துரோகம் செய்து, தமிழகத்தில் பயங்கவாதம் செய்துவரும் பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளின் அடிவருடியான கட்சியின் தலைவனாக தேச துரோகி வைகோ என்பவன் அக்கட்சியும் பொது செயலாளனாக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டான் என்ற ஒரு உபயோகமற்ற ஒரு செய்தியை நிதயானந்தாவின் ஆபாசப் படப் புகழ் சன் டிவி மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி மகிழ்ந்தது..

இருப்பது நாலுபேர் இந்த கட்சிக்கு - இதில் எப்படி போட்டி வரும்.

இதை ஒரு செய்தியாக ஏன் இவன் ஒலி பரப்புகிறான்.?.ஒரு சமயம் காமெடிக்காக இருக்குமோ?




Tuesday, February 1, 2011

இவனெல்லாம் எப்படி முதலமைச்சர் ஆனான்?



சுத்த கர்நாடகமா இருப்பான் போல என்று யாரை சொல்வார்கள்...?அடி முட்டாளைத்தான்..அப்படி ஒரு முட்டாள்தான் கர்நாடக மாநில முதலமைச்சராக இருக்கிறான்..

பார - தீய - ஜனதா என்கிற பயங்கரவாதக் கட்சி தென்னகத்தில் முதல் முதலில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது..ஏதேதோ கிழிக்கப் போகிறது என்று ஆபாசப் பத்திரிக்கைகள் அலறின..ஒரு மயிரும் புடுங்கல அவன். அவன் வேலையே டெய்லி எப்படி தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வது..எப்படி கொள்ளையடிப்பது என்பதிலேயே கழிகிறது..


மக்களைப் பற்றி அவனுக்கு எந்த கவலையும் இல்லை..


இரண்டு தடவைகள் ஆட்சிக்கு ஆபத்து வந்து என்னனனவோ கோல்மால் பண்ணி காப்பாற்றிக் கொண்டான்..அப்புறமாவது நல்லது செய்தானா..? இல்லை கோயில் கோயிலாக அலைந்தான்...எதற்கு? ஆட்சியைக் காப்பாற்றி கொள்வதற்கும்  மேலும் கொள்ளையடிப்பதற்கும்.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் ஊராக சென்று கோழைத்தனமாக அழுது டிராமா போட்டான்..



ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கவர்னர் அவன் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்தார்...பெங்களூருவில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்தினான்..இவனும் மனித மிருகம் நரேந்திர மோடி வழி வந்தவன்தானே...(ராஜ பக்ஷே மீது பாயும் இங்குள்ள தேச துரோகிகள், - இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் செய்த மோடி என்பவன் மீது ஒன்றும் சொல்வதில்லை).

கிருஸ்துவ பாதிரியாரை எரித்துக் கொன்றவர்கள் இந்துத்துவா சக்திகள் இல்லையாம்...இவன் ஆட்சி காலத்தில் இப்படி ஒரு அநீதியான தீர்ப்பு....

இன்றைக்கு இந்த எடியூரப்பா சொல்கிறான்..- தன்னை பில்லி சூனியம் வைத்து கொல்ல எதிர்க் கட்சிகள் முயற்சி செய்கிறார்களாம்..


இவனெல்லாம் எப்படி முதலமைச்சர் ஆனான்?

அப்படி என்றால் உன்னை எதிர்பவர்களை நீ பில்லி சூனியம் வைத்து வெல்ல வேண்டியதுதானே?

ஒரு காலத்தில் சாப்ட்வேர் துறையில் நம்பர் ஒன் மாநிலமாகத் திகழ்ந்த கர்நாடக மாநிலம் மூட நம்பிக்கையாளர்களின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது....

ஹ்ம்ம் என்ன சொல்ல?