தமிழக சட்ட சபை தேர்தல் நெருங்க நெருங்க - எதிர்பாராத அல்லது (பழகிப் போனதால்) எதிரிபார்த்த சம்பவங்கள் நிறயவே சம்பவங்களும், கேலிக்கூத்துகளும், சந்திப்புகளும் நடைபெறுவதைக் காணலாம்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாராலும் வெறுக்கப்பட்ட ஒரு கட்சி இருந்ததென்றால் அது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க தான்.
ஆரம்ப காலங்களில் மரங்களை வெட்டியே தமது கட்சியை வளர்த்த ராமதாஸ், அதன் பிறகு மரம் விட்டு மரம் தாவும் வானரம்போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலையை எடுக்க ஆரம்பித்தார்.
ஒரு தேர்தலில் அவருக்கு கருணாநிதி அண்ணனாகவும், அடுத்த தேர்தலில் ஜெயலலிதா சகோதரியாகவும் தென்படுவார்.
இவரது இந்த சந்தர்ப்பவாத அரசியலால் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பா.ம. க. இன்று கல்யாணப் பத்திரிகை கொடுக்கப்போய் தி.மு.க தலைவரிடம் 31 இடங்கள் பெற்று வந்து இருக்கிறது.
இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு சட்டசபைத்தேர்தல் என்று தொடர்ந்து கூட்டணி வைத்திருக்கும் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கும் நிலையில் - துரோகம் செய்துவிட்டு சென்ற பா.ம.க வுக்கு எந்தவித அவகாசமும் இல்லாமல் தொகுதிகள் பிரித்து கொண்டுத்து இருப்பது ஒரு ராஜதந்திரமாகுமா?
ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக பெரும் நெருக்கடிகளை சந்தித்துவரும் கருணாநிதிக்கு காங்கிரசின் கூட்டணி உண்டா இல்லையா என்று குழப்பத்தின் காரணமாக, ராமதாசை தன்னுடன் வைத்துகொள்ள முடிவெடுத்ததில் முட்டாள்தனமான விளைவே இந்த அவசர தொகுதிப் பங்கீடு.
அதுபோல விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் தமிழக நலனைத்தவிர்த்து, தமிழீழ ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கான பகிங்கரமான ஆதரவாளர்கள்.
இவர்களுடன் கூட்டணிவைக்கும் திமுகவுடன் காங்கிரஸ் சேருமா எனபது சந்தேகமே. அப்படி சேர்ந்தாலும் அதுவும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியே.
அப்புறம் அதிமுக..
இந்தியாவின் நலனினோ, தமிகத்தின் நலனிலோ சிறுதும் அக்கறை இல்லாத வைகோ என்பவனை அடிமையாக வைத்திருந்தாலும், ஜெயலலிதாவும் சாதுர்யமாக காங்கிரசின் கூட்டணியை விரும்புகிறார்.
அதேபோல கருணாநிதி போல அவசரகோலத்தில் முடிவெடுக்காமல், கூட்டணியை பலமாக்க விஜயகாந்த் போன்றோர்களுக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தகுதிக்கேற்ப தொகுதிகள் பங்கீடுகள் நடைபெறுகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளாக, சொகுசு பங்களாக்களில் ஒய்வு பெற்றும், வெறும் அறிக்கைப் போர்களை நடத்தியும் வந்த ஜெயலலிதா, இந்த ஐந்தாண்டு காலங்களில் அதிமுகவின் உண்மையான விசுவாசிகளாக இருந்த பலரை இழந்திருக்கிறார்.
அதையெல்லாம் கடந்து வெற்றிபெற பலமான கூட்டணி அமைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுவரை தனித்து ஆட்சி என்று முழங்கி வந்த விஜயகாந்த், தற்சமயம் சோர்ந்துபோய், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பது அவரது நம்பகத்தன்மைக்கு விழுந்த ஒரு கரும்புள்ளிதான்.
குடிகாரன் என்றும் இந்த ஜெயலலிதாவால் வர்ணிக்கப்பட்ட இந்த தன்மானத் தமிழன் சீட்டுக்களுக்காகவும், தமது கட்சியை தக்கவைத்துக்கொள்வதர்காகவும் இவ்வளவுதூரம் கீழே இறங்கி வந்திருப்பது - எல்லாராலும் வித்தியாசமான அரசியலை தருவார் என்ற நம்பிக்கையை தகர வைத்துவிட்டது.
திமுக கூட்டணியிலிருந்து விலகவும் முடியாது அதே சமயம் அவர்களை மிரட்டியும் வைக்க வேண்டும் என்ற இரட்டை நிலைப்பாடுடன், ராஜா கைது, கலைஞர் டி வி ரெய்டு போன்ற மிரட்டல்களை கையாண்டு அதிக சீட்டுகளைப் பெற முயல்கிறது காங்கிரஸ்.
இவரகளது இந்த அரசியல் விளையாட்டுக்களை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது.
இதில் யார் ராஜதந்திரி என்பதை விட, ஓட்டளிக்கப் போகும் நாம்தான் சிறந்த ராஜதந்திரி என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.
அதைவிடுத்து, காசுக்கும், குவாட்டருக்கும் ஓட்டுப் போடும் பொறுக்கிகள் மட்டுமே ஓட்டுப் போட்டால், அரபு நாடுகளைப் போன்ற எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே நல்லதொரு அரசு உருவாகும்..
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாராலும் வெறுக்கப்பட்ட ஒரு கட்சி இருந்ததென்றால் அது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க தான்.
ஆரம்ப காலங்களில் மரங்களை வெட்டியே தமது கட்சியை வளர்த்த ராமதாஸ், அதன் பிறகு மரம் விட்டு மரம் தாவும் வானரம்போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலையை எடுக்க ஆரம்பித்தார்.
ஒரு தேர்தலில் அவருக்கு கருணாநிதி அண்ணனாகவும், அடுத்த தேர்தலில் ஜெயலலிதா சகோதரியாகவும் தென்படுவார்.
இவரது இந்த சந்தர்ப்பவாத அரசியலால் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பா.ம. க. இன்று கல்யாணப் பத்திரிகை கொடுக்கப்போய் தி.மு.க தலைவரிடம் 31 இடங்கள் பெற்று வந்து இருக்கிறது.
இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு சட்டசபைத்தேர்தல் என்று தொடர்ந்து கூட்டணி வைத்திருக்கும் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கும் நிலையில் - துரோகம் செய்துவிட்டு சென்ற பா.ம.க வுக்கு எந்தவித அவகாசமும் இல்லாமல் தொகுதிகள் பிரித்து கொண்டுத்து இருப்பது ஒரு ராஜதந்திரமாகுமா?
ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக பெரும் நெருக்கடிகளை சந்தித்துவரும் கருணாநிதிக்கு காங்கிரசின் கூட்டணி உண்டா இல்லையா என்று குழப்பத்தின் காரணமாக, ராமதாசை தன்னுடன் வைத்துகொள்ள முடிவெடுத்ததில் முட்டாள்தனமான விளைவே இந்த அவசர தொகுதிப் பங்கீடு.
அதுபோல விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் தமிழக நலனைத்தவிர்த்து, தமிழீழ ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கான பகிங்கரமான ஆதரவாளர்கள்.
இவர்களுடன் கூட்டணிவைக்கும் திமுகவுடன் காங்கிரஸ் சேருமா எனபது சந்தேகமே. அப்படி சேர்ந்தாலும் அதுவும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியே.
அப்புறம் அதிமுக..
இந்தியாவின் நலனினோ, தமிகத்தின் நலனிலோ சிறுதும் அக்கறை இல்லாத வைகோ என்பவனை அடிமையாக வைத்திருந்தாலும், ஜெயலலிதாவும் சாதுர்யமாக காங்கிரசின் கூட்டணியை விரும்புகிறார்.
அதேபோல கருணாநிதி போல அவசரகோலத்தில் முடிவெடுக்காமல், கூட்டணியை பலமாக்க விஜயகாந்த் போன்றோர்களுக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தகுதிக்கேற்ப தொகுதிகள் பங்கீடுகள் நடைபெறுகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளாக, சொகுசு பங்களாக்களில் ஒய்வு பெற்றும், வெறும் அறிக்கைப் போர்களை நடத்தியும் வந்த ஜெயலலிதா, இந்த ஐந்தாண்டு காலங்களில் அதிமுகவின் உண்மையான விசுவாசிகளாக இருந்த பலரை இழந்திருக்கிறார்.
அதையெல்லாம் கடந்து வெற்றிபெற பலமான கூட்டணி அமைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுவரை தனித்து ஆட்சி என்று முழங்கி வந்த விஜயகாந்த், தற்சமயம் சோர்ந்துபோய், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பது அவரது நம்பகத்தன்மைக்கு விழுந்த ஒரு கரும்புள்ளிதான்.
குடிகாரன் என்றும் இந்த ஜெயலலிதாவால் வர்ணிக்கப்பட்ட இந்த தன்மானத் தமிழன் சீட்டுக்களுக்காகவும், தமது கட்சியை தக்கவைத்துக்கொள்வதர்காகவும் இவ்வளவுதூரம் கீழே இறங்கி வந்திருப்பது - எல்லாராலும் வித்தியாசமான அரசியலை தருவார் என்ற நம்பிக்கையை தகர வைத்துவிட்டது.
திமுக கூட்டணியிலிருந்து விலகவும் முடியாது அதே சமயம் அவர்களை மிரட்டியும் வைக்க வேண்டும் என்ற இரட்டை நிலைப்பாடுடன், ராஜா கைது, கலைஞர் டி வி ரெய்டு போன்ற மிரட்டல்களை கையாண்டு அதிக சீட்டுகளைப் பெற முயல்கிறது காங்கிரஸ்.
இவரகளது இந்த அரசியல் விளையாட்டுக்களை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது.
இதில் யார் ராஜதந்திரி என்பதை விட, ஓட்டளிக்கப் போகும் நாம்தான் சிறந்த ராஜதந்திரி என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.
அதைவிடுத்து, காசுக்கும், குவாட்டருக்கும் ஓட்டுப் போடும் பொறுக்கிகள் மட்டுமே ஓட்டுப் போட்டால், அரபு நாடுகளைப் போன்ற எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே நல்லதொரு அரசு உருவாகும்..