Pages

Monday, July 26, 2010

பூவரசியும், அப்துல் கபூரும்..

கடந்த ஒருவாரகாலமாக அல்லோலப்படும் செய்தி பூவரசி என்கிற ஒரு பெண் தன கள்ளக்காதலனை (நன்றி - தினத்தந்தி ) பழி வாங்குவதற்காக அவரது மகனை இரக்கமற்ற முறையில் கொன்றிருக்கிறாள்..

காயல்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த அப்துல் கபூர் என்கிற ஒருவன், அதிக சக்தி பெறுவதற்காக, ஒரு சின்னஞ்சிறு குழந்தையை நரபலில் கொடுத்திருக்கிறான்..

பூவரசி விவகாரத்தை - ஒருவிதத்தில் - நியாயப்படுத்தும் ஒரு சாரர்கூட, அவள் மீது அளவுகடந்த வெறுப்பில்தான் உள்ளனர்..பத்திரிக்கைகளும் அவளை படுபாதக கொலைகாரி என்று செய்தி வெளியிடுகின்றன..

ஆனால் இந்த அளவு அப்துல் கபூர் பற்றி அவைகள் செய்தி போடுவதில்லை..ஏன்? பூவரசி செய்த கொடுமைக்கு சற்றும் கூட குறையாமல்..ஏன் இன்னும் கொடுமையாக கொன்றிக்கும் அந்த வெறி நாய் அப்துல் கபூரை மனிதன் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

அந்த இரு மிருகங்களும் தாம் செய்த கொலைகளை ஒப்புக் கொண்டுவிட்டன..இரக்கமற்ற இந்த இரு மிருகங்களையும் விசாரணை என்று இழுத்தடிக்காமல் - கடுமையான தண்டனையை உடனே வழங்க வேண்டும்... அதற்க்கான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்..

இருவரையும் சாக்கடையில் மூழ்கடித்து சாகடிக்கவேண்டும்..

விசாரணை என்ற பெயரில் நாட்களைக் கடத்துவதால் நாளைக்கு மனித உரிமை என்ற பெயரில் சில ஜென்மங்கள் இதற்காக வக்காலத்து வாங்கி அவைகளது தண்டனையை குறைக்கவோ விடுதலை வங்கிக் கொடுக்கவோ முயலக்கூடும்..என்னுடைய ஆசை எல்லாம் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவோரைக்கூட மிருகங்களாகக் கருதி கேவலப்படுத்தி தண்டனை கொடுக்கவேண்டும்...இவர்களுக்காக யாரும் வாதாட வரக்கூடாது..

இப்படி செய்தால்தான் நாளைக்கு இந்தமாதிரி காரியங்களை செய்ய யாரும் அஞ்சுவார்கள்..

தினமும் வெளிவரும் செய்திகளில்...

கள்ளத்தொடர்பு, கள்ளக்காதலனோடு ஓடிப்போகுதல், புருஷனை ஆள்வைத்துக் கொல்லுவது, காதலனோடு ஓடிப்போவது, திருமணத்திற்கு முன் செக்ஸ், இந்த செய்திகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன...

ஹ்ம்ம்...33% இடவொதுக்கீடு எதில் பெண்களுக்கு இருக்கிறதோ இல்லையோ..தினமும் காலையில் செய்திகளையும் ஆபாச tv க்களையும் பார்க்கும்போதும், பெண்கள் தாங்களாகவே 50% உரிமையை எடுத்துக் கொண்டார்களோ என்று தோன்றுகிறது...

Friday, July 23, 2010

மனிதாபிமானம் vs தமிழின உணர்வு!!!

முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் கைப்பற்றி விட்டாராம்..அவர் தமிழராம்..இங்கே தமிழினப் பற்றாளர்கள் கொண்டாடுகிறார்கள்...

முத்தையா முரளிதரன் என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர்..இதில் எங்கே மொழி வந்தது?

வீ ராமகிருஷ்ணன் என்பவர் வேதியலுக்காக நோபல் பரிசு வென்றார்...இவர் இங்கிலாந்து குடியுரிமைப் பெற்றவர்..தமிழ் அறவே தெரியாது.. 
ஆனால் பிறப்பால் தமிழராம்..கொண்டாடுகிறார்கள்..

இப்படி வீண் பெருமை அடிப்பதே தமிழன் பெருமை என்று கொண்டாடும்  நமது தமிழ்நாட்டில் மனிதாபிமானம் இப்படித்தான் உள்ளது..

இந்தியாவில் குஜராத்தில் அநியாயமாக மக்கள் கொல்லப்பட்டால் கண்டுகொள்ளாமல் இருப்பது...

ஒரிஸ்ஸாவில் ஹிந்து வெறியர்களால் கிருஸ்துவ பாதிரியார் கொல்லப்படும்போதும்,

மும்பையில் சிவசேன வெறியர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போதும்,

 தினம் தினம் காஸ்மீரில் குண்டுகள் வெடிக்கும்போதும்,

 வட இந்தியாவில் மாவோயிஸ்டுகள் இரயிலையும், பஸ்களையும் குண்டுவைத்து தகர்க்கும்போதும்,

தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று பெருமை அடித்துக் கொள்வது..

அதேசமயம், தமிழினப் பற்று எப்படி உள்ளது?

இந்தியாவில் பிறந்து, அங்கேயே எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, சில அரசியல் களவாணிகள் இங்கேயே ஓட்டுப் பிச்சை எடுத்து, அதன் மூலம் பதவிகளையும் இலவசங்களையும் அனுபவித்துக் கொண்டு,

அந்நிய நாடான இலங்கையில் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் நடக்கும் போரில், தீவிரவாதிகளை ஆதரித்துக்கொண்டு இந்திய அரசியல்வாதிகளை கொன்ற விடுதலைப் புலிகளுக்காக, இந்தியாவை எதிர்க்கும் தேச துரோகிகளுக்கு பெயர் தமிழ் பற்றாளர்..

தமிழ்நாட்டில் பிழைத்துக்கொண்டு, இலங்கையில் உள்ள தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் சினிமாக்கூத்தாடிகள்..
சினிமாவில் விலை போகாமல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசும் தேச துரோகிகள்தான் இங்கே தமிழ் இனக்காவளர்கள்

ஒரு மலையாள நடிகை, படப்பிடிப்பு விசயமாக இலங்கை செல்லக்கூடாதாம்

ஆனால் ஒரு தமிழ் கிரிக்கெட்டு வீரர் சிங்களனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளயாடலாமாம்.

தமிழனை விரட்டுவதற்காக மும்பையில் வெறியன் பால்தாக்கரே என்பவனால் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா என்னும் கட்சிக்கு இங்கே தமிழ்நாட்டில் கிளைகள் உண்டு..

ஆபாசமாக படம் எடுத்து, அதற்க்கு தமிழ்பெயரை சூட்டி அரசை ஏமாற்றும் அவலமும் இந்த தமிழ் பற்றாளர்களிடம் உண்டு..

தமிழன் என்பவன் மனிதனா தமிழனா?

Tuesday, July 20, 2010

மதராச பட்டினம் - விமர்சனம்.

பெயரை பழசாக வைத்து, பின்னன்னியில் கருப்பு வெள்ளையில் கிராபிக் செய்தால் பழமையாகத் தெரிந்துவிடும் என்று நினைத்து இருக்கிறார்கள்..

அப்படி ஒன்றும் பாதித்ததாகத் தெரியவில்லை..

கதை என்று பார்த்தால்...

இந்தியா சுதந்திரத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கையில்..தம்மையும் காதலையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு ஜோடி அலைவதும், அதற்காக சில இளைஞர்கள் உயிரைக் கொடுப்பதும்தான்...இடையில் ஒன்றிரண்டு தேசபக்தி பிட்டுக்கள்...


ஆர்யா சில இளைஞர்களுடன் மல்யுத்தம் நடத்துவதைப் பார்த்தால் ஏதோ சுதந்திரப் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டும்...சும்மா விளயாடிக் கொண்டிருக்கிறார்கள்..

சலவைத் தொழிலாளர்களின் இருப்பிடத்தை அபகரிக்க முயலும் அன்னியரைத் தாக்குவதற்காக முகத்தைக் கட்டிக்கொண்டு வரும் கதாநாயகன், வெள்ளைக்காரப் பெண்ணைக் கண்டு காதலில் விழுவது ஏற்கனவே "வீர்" என்றொரு ஹிந்திப் படத்தில் வந்தது..(இந்த மாதிரியான திரைப் படங்களில் இது மாதிரியான காட்சிகளை வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது).

அதேபோல கதாநாயகனைக் கட்டிவைக்கும் அதிகாரி, அவனைக் காப்பாற்றும் கதாநாயகி, வழக்கமான காட்சிகள் . அதுவும், விடுதலையான கதாநாயகனை, "இந்தமுறை நீ தப்பி விட்டாய்" என்று அந்த அதிகாரி கூறுவதும், "அதேதான் நானும் சொல்றேன்" என்று அவன் பதிலளிப்பதும், "நாயகன்" படத்தில் அப்பட்டமான காப்பி.

ஆசிரியராக வரும் ஒருவர் இரவு பகல் பாராமல் மனைவியுடன் கூடிக்கொண்டிருப்பதாகக் காட்டுவது ஆபாசம்.

கதாநாயகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட கதாநாயகி, வேறொருவனை மணந்து பேரன் பேத்திகளுடன் சந்தோசமாக வாழ்ந்துவிட்டு, இறுதிக்காலத்தில் தன காதலனை நினைவுகூறுவது நல்ல நகைச்சுவை..

அதே போல அவள் நினைவாகவே கதாநாயகன் வாழ்ந்து கோடீஸ்வரனாக ஆகி, திருமணமே செய்யாமல் மரணிப்பதும் காமெடிதான்..

இந்தப் படத்திலும் தாலி செண்டிமெண்டைக் காட்டி ஏமாற்றப் பார்த்திருக்கிறார்கள்..எடுபடவில்லை..

நல்லவிசயம் என்று பார்த்தால்.......

ஒன்றுமே இல்லை..(எந்தப் படத்தில்தான் இருக்கிறது?)


ஹ்ம்ம்..இன்னும் எத்தனைப் படம்தான் இதுபோல் வரப்போகிறதோ...

Wednesday, July 14, 2010

ஒரு வாரம் விடுமுறை..!

ஒன்றிரண்டு மாதங்கள் தொடர்ந்து பதிவிடாமல் இருந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் இது போன்ற அறிவிப்புகள் செய்ததில்லை..

தற்சமயம், வக்கிர புத்தி பிடித்த ஆல் இன் ஆள் அழுக்கு ராஜ சாக்கடை, வால்பையன் போன்ற மதவெறி கும்பலுடன் விவாதம் தொடர்வதால் இந்த அறிவிப்பு தேவைப்படுகிறது..!
 
சில அலுவல்கள் காரணமாக நான் வெளியூர் செல்லவிருப்பதால் வரும் திங்கள் வரை பதிவிடவோ பின்னூட்டமிடவோ இயலாது என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்..


நடுநிலையான நண்பர்கள் "வால்" குரூப்பை மன்னிப்புக் கேட்கவைக்கும்
வேலையை தொடர வேண்டுகிறேன்.


நன்றி...!!!

Tuesday, July 13, 2010

தமிழ்மணம் (tamilmanam.net) இன் ஒருதலைப் பட்சமான போக்கு...!!!

பலதரப்பட்ட பதிவுகளையும் வெளியிடும் ஒரு திரட்டியாக செயல்படும் tamilmanam.net என்னும் திரட்டி ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகத்தான் தெரிகிறது..

ஆள் இன் ஆள் அழுக்குராஜா சாக்கடை என்னும் ஒரு பன்னாடை முகம்மது நபியை அநாகரீகமான முறையில் விமர்சித்து எழுதி இருந்ததை வெளியிட்டு மகிழ்ந்த தமிழ்மணம், அதற்க்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட எனது பதிவை நீக்கி தனது சார்பு நிலையை பறைசாற்றி இருக்கிறது..


சினிமா என்னும் பெயரில் ஆபாசம், நாத்திகம் என்ற பெயரில் அநாகரீகம் போன்ற அசிங்கமான பதிவுகளைவிட நான் ஒன்றும் ஆபாசமாக எழுதிவிடவில்லை..

இவர்கள் எனது பதிவை நீக்கிவிட்டதால் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை..எங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது...நாத்திகம் என்ற பெயரில் மதவெறியை தூண்டும் ஆல் இன் ஆள் அழுக்குராஜா சாக்கடை அந்த பதிவை நீக்கி விட்டது..

இன்னும் சொல்லப்போனால் ..அவனே நீக்கி விட்ட பதிவை இவர்களுக்கு நீக்கத் தெரியவில்லை..

அவனுக்கு கண்டனம் தெரிவித்த பதிவை இவர்கள் நீக்கி இருக்கிறார்கள்..

ஹ்ம்ம்..என்ன நடு நிலைமையோ..

Friday, July 9, 2010

ஆல் இன் ஆள் அழுக்கு ராஜா சாக்கடையும் வடிகட்டிய முட்டாள் வால்பையனும்

பன்றிக்கு பீ மணக்கும்..சாக்கடைக்கு பன்னீர் நாறும். அப்படித்தான் உள்ளது வால்பையனும் ஆள் இன் ஆள் அழுக்கு ராஜாவின் நடவடிக்கையும்..

இஸ்லாமியர்கள் தமது ஒப்பற்ற தலைவராக போற்றும் முகம்மது நபியை கண்டமேனிக்கு சாடியிருக்கும் இந்த பன்னாடைகளுக்கு அதற்கான தகுதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்..தினமும் சாராயத்தில் மிதக்கும் இந்த சாக்கடைகள் எந்த அருகதையை வைத்து அவரை இப்படி சாடி இருக்கின்றன..


அவர் எத்தனை பெண்களை மணந்தால் உனக்கென்ன?

அவர் காலத்து எதிரிகளாலேயே குற்றம் சுமத்த முடியாத உத்தமராய் வாழ்ந்த நபிகள் நாயகத்தை இந்த பன்னாடைகள் கிண்டல் செய்வதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த மூடர்களுக்கு ஒரு எச்சரிக்கை..

நீ முதலில் உன் மதத்தில் உள்ள புருடாக்களையும் முட்டாள்தனங்களையும் சாடிவிட்டுப்போ..

நீ சாமியாரை திட்டுவதால் நீ ஒன்றும் நல்லவன் கிடையாது..

உன் மதத்தில் என்ன கயவாளித்தனம் இருக்கிறதோ அதைத்தான் நீயும் செய்வாய்..


மரணத்தருவாயில் ஒரு மாமனிதர் தன மனைவியின் மடியில் கிடக்கிறார்..இதில் என்ன காமத்தை கண்டாய்..

மரணத்தில் எந்த மனிதானவது காமமுருவானா..

இதைப் போய் ஒரு அறிய கண்டுபிடிப்பாக உளறுகிறது இந்த பொறம்போக்கு..


இணையத்தளம் நல்ல விசயங்களை சொல்வதற்கே...

நீ குடிபோதையில் அதை உன் அரிப்பை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தாதே...

எச்சரிக்கை...!!!

Thursday, July 8, 2010

ஒரு நாள் மட்டும் கேர்ள் பிரண்ட் ஆக வர்றியா?

இது சமீபத்தில் ஒரு டி வி நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர் ஆடிப்பாடும் நிகழ்ச்சியில் நான் கேட்ட பாடல் வரிகள்..

இது போன்ற கேவலங்களை வைத்துத்தான் தனியார் டி விக்கள் வயிறு வளர்த்து வருகிறார்கள்..

பள்ளிக்கு போகும் சிறுவர்களையும் கெடுக்கும் இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஆபாச நடிகைகள்தான் நடுவர்களாகவும் இருக்கிறார்கள்..

"ஒரு நாள் மட்டும் கேர்ள் பிரண்ட் ஆக வர்றியா? " இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? ஒருநாள் என்கூட படுக்க வர்றியா என்றுதானே அர்த்தம்? .

அதை அந்த கேவலமான விபச்சாரிகள் செய்து விட்டிட்டு போகட்டும்..எதற்கு இளம் சிறுவர்கள் மேல் திணிக்கிறார்கள்...? இதற்க்கு அந்த குழந்தைகளின் பெற்றோரும் உடந்தையாக இருப்பதுதான் கொடுமையின் உச்சக் கட்டம்..

எந்த டி வியை திறந்தாலும் வட்டமான ஒரு மேஜை..சுற்றிலும் கலர்கலராக விளக்குகள்..இருப்பக்கமும் புத்த்தாடை அணிந்த சிறுவர் சிறுமியர்..

நடுவர்களாக விபச்சாரிகள்...அவர்களுக்கு " ஜட்ஜ்" ஆம், இந்த கேவலமானவர்களால் நீதிபதிகளின் மரியாதையே போய் விடும் போல இருக்கிறது..

சில சமயம் பயமாகக் கூட இருக்கிறது.. இப்படி எல்லாரும் சிறு வயதிலேயே பாடவும் கூத்தடிக்கவும் வந்துவிட்டால் நாளை இந்தியாவில் தொழில் செய்வது யார்? யார் வேலைக்கு போவார்கள்? இன்னொனுன்றும் நினைக்கத் தோன்றுகிறது..இப்படி எல்லாரும் பாட வந்துவிட்டால்..அப்புறம் ஒரு பாடலுக்கு ஆளுக்கு ஒரு வரியை பாடிவிட்டு செல்ல வேண்டியதுதான்..ஒரு பாடலை யார் பாடினார்கள் எனபது போக..எத்தனை பேர் பாடினார்கள் என்ற நிலைமைதான்..

நமது தலைமுறைக்கு முந்திய பாடல்களை மெனக்கட்டு ஆறு அல்லது ஏழு வயது சிறுவர்கள் பாடும்போது, இதனை மனப்பாடம் செய்ய இவர்கள் எவ்வளவு நேரம் எடுத்திருப்பார்கள்? இந்த முயற்ச்சியை தனது படிப்பிற்காக அவர்கள் செய்வார்களா?

கஷ்டப்பட்டு படிப்பவனை கேலி செய்தும், இது மாதிரி ஆபாசப் பாடலைப் பாடுபவனை உழைப்பால் உயர்ந்தவன் என்றும் (பாய்ஸ் போன்ற படங்கள்..) படமெடுக்கும் கேவலமான சினிமாக்கூத்தாடிகள் இருக்கும் வரை இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்..



விவேக் போன்ற சினிமாக் கூத்தாடிகளை மட்டுமே சந்திக்க அடிக்கடி நேரம் ஒதுக்கும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற சொல் வெறும் கனவாகவே இருந்து விடும்..

Saturday, July 3, 2010

காமெடி பீசு..

நகைச்சுவைப் பதிவுகள் நிறைய நண்பர்கள் எழுதுகிறார்கள்..அவைகளுக்கு நல்ல வரவேற்ப்பும் உள்ளது.


விமர்சனப் பதிவுகளுக்கு எதிர்ப்பாளர்களே அதிகமதிகமாக உள்ளார்கள்...ஏனெனில் அவர்களது கருத்துக்களோடு நமது கருத்துக்கள் ஒத்துப் போவது இல்லை.

நடிகர்களையோ, இயக்குனர்களையோ விமர்சித்தால் ஏதோ இவர்களது தந்தைகளை விமர்சித்தது மாதிரி கோபம் வருகிறது..

ஜீவபாலன், sathish என்ற பெயருடைய இரண்டு வெத்து வேட்டுக்கள் ஏதேதோ மிரட்டல்கள் விடுத்தன (பார்க்க : ராவணன் விமர்சனம் http://marmayogie.blogspot.com/2010/06/blog-post_18.html#comments ) அனால் எனது பதிலுக்கு பிறகு அவர்களைக் காணவில்லை பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாமோ என்று கூட தோன்றுகிறது !...பாவம்..பயப்பட வேண்டாம்..உங்கள் பதிவுகளை பதியுங்கள் நண்பர்களே..



சரி..நாமும்தான் நகைச்சுவை பதிவு ஒன்று போடுவேமே என்று பார்த்தல் எழவு வரவே இல்லை..

சரி ட்ரை பன்னுவோமே..


அதிகமதிகம் பேர் நகைச்சுவைப் பதிவுகள் போட்டாலும் அதில் சிலருடைய பதிவுகள் சகிக்கவில்லை..இவர்களுக்கு நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்றும் நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தால்தான் தெரிகிறது நகைச்சுவைப் பதிவு ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல என்று! ..விமர்சனம் ஈசியாக வந்து விடுகிறது..ஆனால் காமெடி?



முதலில் காமெடி பதிவுக்கு சில வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியம்..

கொய்யால.. ங்கொக்காமக்கா, பயபுள்ள..அப்புறம் ஆணி புடுங்குறது, வடை போச்சே..இப்படி.. நிறையபேர் இந்த வார்த்தைப் பிரயோககங்களை வைத்தே ஒப்பேத்தி விடுகிறார்கள்..

எனது பத்தாம் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது..



(ங்கொக்காமக்கா) அரையாண்டுத்தேர்வு என்று நினைக்கிறேன்.


விடைத்தாள்களை விநியோகித்துக் கொண்டிருந்த அறிவியல் ஆசிரியர் (கொய்யால)ஒரு மாணவனை மட்டும் நிற்க வைத்துவிட்டு விடைத்தாளை மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்...


இறுதியாக அவனது விடைத்தாளை படித்தார்..


அதில் (பயபுள்ள) அவன் கடைசி பக்கத்தில் " பரீட்ச்சைக்கான நேரம் முடிந்து விட்டதற்கான மணி அடித்து விட்டது..ஆசிரயர் போதும் என்று சொல்லிவிட்டார் எனவே நான் மேலும் விடை எழுதவில்லை" என்று எழுதி இருந்தான்..

 " இப்படி நீ (ஆணி புடுங்குறது) எழுதின நாங்க மார்க் போட்டுவிடுவோமா? இதுக்கு நீ ரெண்டு மூணு கேள்விக்கு பதில் எழுதி இருக்கலாமே" என்று ஆசிரியர் கேட்டபோது அந்த மாணவனின் முகம் போன போக்கை பார்க்கணுமே..பாவம்....

அடடா வடை போச்சே..!!

நன்றாக இருக்கிறதா?

பின் குறிப்பு : இப்போது அந்த மாணவன் ஒரு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறான்..