Pages

Sunday, February 28, 2010

இந்தியாவில் வசிப்பவரெல்லாம் இந்தியரா?

 பால்தாக்கரே என்கிற ரவுடி மும்பையில் தமிழர்கள் தொழில் செய்யக்கூடாது என்பதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, மக்களுக்கு வெறியூட்டி பிழைத்துக் கொண்டிருப்பவன். பிறகு இந்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டினான். அவனுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும், அவனைக்கைது செய்து உள்ளே தள்ள மத்திய அரசுகளுக்கு தைரியம் இல்லாமல் போய்விட்டது.


தற்போது, ஆஸ்திரேலிய, மற்றும் பாகிஸ்தான் கிரிகெட் அணிகள் விளையாட வந்தால் தடுப்போம் என்று சொல்லும் அந்த ரவுடியை மத்திய அமைச்சர் சரத் பவார் சந்தித்து விட்டு செல்கிறார்..இப்படித்தான் ரவுடிகளிடம் ஒரு அரசு நடந்து கொள்ளுமா?

ஒரு பொறுக்கியோ ரவுடியோ சட்டத்தை மீறினால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல், அந்த ரவுடியிடம் போய் சரி சமமாக உட்கார்ந்துகொண்டு பேச்சுவார்த்தை செய்வது ஒரு முதுகெலும்புள்ள அரசு செய்யுமா?

இதனால்தான் அவன் குடும்பத்தில் இருந்தே மேலும் மேலும் ரவுடிகள் வளர்ந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பொறுக்கிகளை தட்டிக் கேட்க வக்கின்றி அரசு அறிக்கைகளும் பேச்சு வார்த்தைகளும் நடத்திகொண்டிருக்கின்றன.


ஒரு கீழ்க்கண்ட கதை ஞாபகம் வருகிறது.
ஒரு வெளிநாட்டவன் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு இந்தியா வந்தான். பல இடங்கள் சுற்றிப்பார்த்து பிறகு தன் தாய் நாட்டிற்குத் திரும்பிசென்றான்..

அப்போது தன் நாட்டில் அவன் அவனது இந்திய நண்பனை சந்தித்தான். அந்த இந்திய நண்பன் கேட்டான் "எங்களது நாடு உனக்குப் பிடித்திருந்ததா? எப்படி இருக்கிறது?"

அவன் சொன்னான்.." ஆமாம் .. இந்திய எனக்கு மிகவும் பிடித்தது ..அருமையான ஒரு நாடு, நல்ல இயற்கை வளங்கள் நிறைந்த நாடு, சரித்திரங்கள் நிறைந்த நாடு " என்று சொன்னான்.

மீண்டும் அந்த இந்திய நண்பன் கேட்டான், " அங்கே இந்தியர்கள் எப்படி உள்ளனர்...? அவரகளது பழக்க வழக்கங்கள் உனக்கு பிடித்திருக்கிறதா? " என்று.

அதற்கு அவன் " இந்தியரா? நான் அங்கே எந்த ஒரு இந்தியனையும் சந்திக்கவே இல்லையே..நான் சந்தித்தது எல்லாம், காஷ்மீரில், கஸ்மீரிகளையும் , பஞ்சாபில் பஞ்சாபிகளையும், மற்றும் பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்கள் முறையே பீகார், மகாராஷ்ட்ரியன், தமிழன், மலையாளி போன்றவர்களைத்தானே சந்தித்தேன் - இன்னும் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், சீக்கியன் போன்றவர்களையும் சந்தித்தேன் " என்று ஏளனமாகச் சொன்னானாம்.

பாருங்கள் எவ்வளவு சீரியசான ஜோக் என்று..

அப்புறம் எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் ஒன்று கீழே..

" நாம் வசிக்கும் நாட்டில் பிஸ்சா மிக சீக்கிரமாக நம்மை வந்தடைகிறது...ஒரு ஆம்புலன்சை விட, போலிசை விட ?

கார் லோன் 5% தான்..ஆனால் எஜுகேசன் லோன் 12%.. அரிசி விலை 40 ருபாய், சிம் கார்டு இலவசம்..!"


நன்றாக இருக்கிறது அல்லவா?

சொல்வோம் " நானொரு இந்தியன்..!" என்று..


ஜெய் ஹிந்த் !!!

Saturday, February 27, 2010

ஏழு விஷயங்கள் வேண்டாமே...!!!

சாப்பிட்ட பின்பு பின்பற்றகூடாத ஏழு செயல்கள்:


1) புகை பிடிப்பதை நிறுத்திவிடுங்களேன் ப்ளீஸ்..


சாப்பிட்டவுடன் பலர் சிகரெட் பற்ற வைக்கின்றனர்..(ஏதோ..இதுதான் கடைசி சிகரெட் என்பது போல)..சாப்பிட்டவுடன் புகைப் பிடிப்பது, மற்ற நேரங்களில் புகைப்பதைவிட பத்து மடங்கு தீமையை விளைவிக்கும்..இது ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை..காசநோய்க்கான வாய்ப்புகள்  அதிகம்..இன்னும் ஏன் அந்த வில்லங்கத்தை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்..விட்டொழியுங்கள்...

2) பழங்கள்...


பொதுவாகவே பழங்கள் உடம்புக்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவைதான்..ஆனால் தக்க நேரத்தில் சாப்பிடுவதுதான் உகந்தது. சாப்பிட்டவுடன் பழங்களை உண்ண வேண்டாம்..அப்படி உண்பதால் வாயுத்தொல்லைகள் ஏற்படும்..அப்படி பழம் சாப்பிட்டுதான் ஆகவேண்டும் என்றால்..சாபிடுவதறுக் ஒரு மணி நேரம் முன்போ அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தோ உண்ணலாமே..


3) தேநீர்

தேயிலையில் ஆசிட் அதிகம் உள்ளது. உணவுக்குபின் உடனேயே தேநீர் அருந்துவதால் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள புரோட்டீன் செரிமானம் ஆகுவது பிரச்சினை ஆகிவிடும்.
4) இறுக்கமான உடைகளை தளர்த்திக் கொள்வது.

விருந்துக்கு சென்றாலோ, நல்ல உணவு உண்ண சென்றாலோ சாப்பிடுவதற்கு முன் உடைகளை தளர்த்திக்கொள்வது சிலருடைய (பலருடைய) பழக்கம்.. அவ்வாறு தளர்த்திக்கொண்டு அதிகமான உணவுகளை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் உடைகளை இருக்கிக்கட்டுவதால்..உணவு வயிற்றிலேயே தங்கி சரியாக செரிமானம் ஆகாமல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.. - எவ்வளவு சாப்பிட்டாலும் நமது உடல் தேவையான சத்துபோருட்களை மட்டுமே எடுத்து மற்றவைகளை கழித்து விடும்..அப்புறம் என்ன அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழ்வோமே..

5) குளிப்பது.

குளிப்பதால் இரத்த ஓட்டம் கை கால் மற்றும் உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும். சாப்பிட்டவுடன் குளிப்பதால், மற்ற இடங்களுக்கு செல்லவேண்டிய இரத்த ஓட்டம் வயிற்றுபகுதியில் தன் வேலையை விட்டு எல்லா இடங்களுக்கும் செல்வதால், செரிமான பிரச்சினை ஏற்ப்படும். சாப்பிட்டுவிட்டு குளிக்கலாமே? (கூழானாலும் குளித்தபின் குடி என்று சொன்னது இதனால்தானோ?)

6) நடப்பது..

சாப்பிட்டவுடன் 100 அடிகள் நடந்தால் 99 வருடங்கள் வாழலாம் என்று யாரோ சொல்லி இருக்கலாம்..ஆனால் இது உண்மையல்ல.. சாப்பிட்டுடன் நடப்பதால் போஷாக்குள்ள உணவை உடனேயே செரிமானம் செய்வதில் பிரச்சினை ஏற்படும்.

7) தூங்குவது.

சாப்பிட்டவுடனேயே தூங்குவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் வாயுத்தொல்லைகள் ஏற்படுகிறது...

ஆரோக்கியமாக வாழ ஆசை இருந்தால் மட்டும் போதாது..அதற்கான முயற்சிகளையும் செய்வோம்..

Friday, February 26, 2010

நமீதாவின் மச்சான்களும் ஆபாச விகடனும் ..!

இந்தியாவுக்கே தேசபக்தியை கற்றுக் கொடுத்தவரும், சட்டசபைக்கு குடித்துவிட்டு வரும் குடிமகன் என்றும் புகழப்பட்டவரான நடிகர் விஜயகாந்தால் அறிமுகம் செய்யப்பட்ட அற்புதமான ஒரு நடிகைதான் நமீதா..

பாவம் வயிற்றுப் பிழைப்புக்காக தன் உடம்பைக்காட்ட வந்த அந்தப்பெண்ணை ஒரு நடிகை என்றே யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை..இரண்டாம்தர வேடங்களிலும் ஆபாச வேடங்களிலும் நடித்தாலும் தான் வானத்தில் இருந்து  குதித்தவராக கற்பனை செய்துகொள்ளும் (எல்லா நடிகைகளும் அப்படித்தான் நினைத்துக்கொள்கிராளுங்க) அந்த நடிகைக்கு...சினிமாகாரனுங்களுக்காகவே முதல்வராக இருக்கும் கருணாநிதியின் சொந்த டி.வீ இல் "மானாட மயிலாட" என்கிற ஆபாச நிகழ்ச்சியில் நடுவராக (நடுவரும் ஆபாச உடைதான் அணிவார்கள்) பங்கேற்கும் வாய்ப்பும், மக்களுக்கு அதை பார்த்துதொலைக்கும் தொல்லையும் ஏற்ப்பட்டது.

அதில் அந்த ஆபாச நடிகை உச்சரித்த அதிசய வார்த்தைதான் "மச்சான்" ! .இதற்கும் முன் தமிழில் அப்படியொரு வார்த்தையே இல்லை என்பது போலவும், மச்சான் என்கிற வார்த்தை நமிதா கண்டுபிடித்த புனிதமான சொல் போலவும் - தமிழகத்தின் ஆபாச வியாபாரியான ஆனந்த (ஆபாச) விகடன் கொண்டாடி வருகிறான்.

இந்தவார ஆனந்த (ஆபாச) விகடனின் கேவலப் பக்கங்கள்...

ரஜினி என்கிற நடிகரால் (அவரது மகள் திருமண நிச்சயதாரத்தத்திற்கு நேரடியாக அழைக்கப்படாமல்) அலட்சியப்படுத்தப் பட்ட முதல்வர், வெக்கங்கெட்டு வீல்சேரில் அந்த நிச்சயதார்த்தத்திற்கு சென்றது பற்றிய செய்தி..(இதுவும் அவரை அவமானப்படுத்துவற்காக வெளியிட்டிருப்பானோ?)

அஜித் என்கிற நடிகர் ஏதோ கூட்டத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பேசிய சில வார்த்தைகளை (அதன் பிறகு அந்த "தல" முதல்வரின் காலில் விழுந்ததை கண்டும் காணாமல் விட்டுவிட்டு) அதற்கு இவனாகவே பல்வேறு அர்த்தங்கள் கற்பித்து அந்த நடிகர் புகழ் பாடுகிறான்.

யாரோ ஒரு ஹிந்தி ஆபாச நடிகையின் பல்வேறு கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு, இவளுக்கு ரகசிய சிநேகிதன் யாரு (பாவம் அந்த சின்னபெண்ணுக்கு அறுபதை தாண்டிய ரஜினிதான் பிடிக்கும் என்று ப்ரோக்கர் வேலை வேறு) படுக்கை அறையில் என்ன பண்ணுவாள், சின்னப் பையன்களை அவளுக்கு பிடிக்கும் என்று மாமா வேலை செய்கிறான்..

அப்புறம் எந்த எந்த நடிகை எவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள் என்கிற கேவலம் கெட்ட விசயங்களையும் கிசு கிசு என்கிற பெயரில் வெளியிடுகிறான்..


ஒரு தலையங்கத்தில், தி மு க செயற்குழுவில் கலந்து கொண்ட அ தி மு க கட்சி எம் எல் ஏ க்களை வெட்கங்கெட்டவர்கள் என்று திட்டும் ஆபாச விகடனுக்கு , ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக செய்திகளை வெளியிட்டோம் என்றும் பீத்திக்கொண்டு, இன்று வியாபாரத்திற்காக, நடிக நடிகைகளுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் பத்திரிக்கையாக மாறிவிட்டு இவர்களை குற்றம் சொல்ல ஒரு தகுதியும் இல்லை..


நடிகர் நடிகை என்பவர்கள் தன் சுய தேவைகளுக்காக வெட்கம் மானம் இழந்து நடு ரோட்டில் கட்டி பிடித்து ஆபாசமாக நடிக்கக்கூடியவர்கள்..இவர்களால் எந்த உபயோகமான ஒரு காரியமும் நடப்பது இல்லை..

இவர்கள் புகழ்பாடி, அரசியலுக்கு இவர்கள்தான் வரவேண்டும் என்று, ஈனத்தமான காரியங்களில் ஈடுபடும் ஆனந்த (ஆபாச) விகடன் போன்ற கேவலமான பத்திரிக்கைகள் - தம்மை, ஜனரஞ்சக பத்திரிகை என்றும், பழம்பெருமை வாய்ந்த பத்திரிகை என்றும், தன்னைத்தானே சொல்லிக்கொள்வதற்கு துளி கூட தகுதி இல்லை..மேலும் தமிழகத்தின் நம்பர் ஒன் பத்திரிகை என்றும் சொல்லி, தமிழக மக்களை கேவலப்படுத்தவேண்டாம்..

வியாபாரம் வியாபாரம் என்று மக்களை ஏமாற்றும் இந்த ஆபாச வியாபாரிகள் திருந்துவது நடக்குமா?
 
என்னடா இவ்வளவு பேசிட்டு இவனும் ஆபாசப்படங்களை போடுரானே என்று நீங்கள் முணுமுணுப்பது நன்றாகவே கேக்குது..ஆனா அப்போதானே நீங்கல்லாம் பாப்பீங்க..ஹி ஹி

Thursday, February 25, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப் 8mbu e KFF�வது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது.

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
 
காலையில் ஒரு நல்ல விஷயத்தை பதியாலமே என்றுதான்..ஓகே யா நண்பர்களே?

Wednesday, February 24, 2010

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்

இன்றைய தினம் நிச்சயமாய் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான நாளாக இருக்கும்..

பொதுவாகவே கிரிக்கெட்டால் மக்களின் நேரங்கள் அநியாயமாக வீணாகப்போகிறதே என்ற கருத்துடையவன் நான்..

ஆனால் டெண்டுல்கர் தான் தேர்ந்தெடுத்த துறையில் நியாயமான அர்ப்பணிப்புடன் விளையாடி வருவதை யாராலும் மறுக்க முடியாது.

37 வயதை நெருங்கும் டெண்டுல்கர், ஏறத்தாழ 21 வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடி, இன்றைக்கு யாருமே நெருங்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரராக உயர்ந்துள்ளார்..இதற்கெல்லாம் மகுடமாக, இன்று (24/02/2010) சவுத் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிகெட் விளையாட்டில் 147 பந்துகளை சந்தித்து 200  ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

மற்ற எந்த சாதனைகளைவிடவும் இந்த சாதனை பலவகைகளில் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சச்சின் சாதாரணமான ஒரு அணிக்கெதிராக இந்த இரட்டை சதத்தை எடுத்துவிடவில்லை..உலகிலேயே சிறந்த அணி என கருதப்படும் சவுத் ஆபிரிக்கா அணிக்கெதிராக இந்த சாதனையை புரிந்துள்ளார்..

மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த சயீத் அன்வர், மற்றும் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த காவென்டரி ஆகியோரது சாதனைகளை முறியடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 ஓட்டங்கள் எடுத்து, உலகிலேயே ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச் சதங்கள் எடுத்த முதல் (ஏன் ஒரே வீரர் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்) வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

மற்ற கிரிக்கெட் வீரர்களைப்போல எந்த ஒரு வம்பிலும் கிசு கிசுக்களிலும் சிக்காத ஓர் உண்மையாக வீரராக கிரிக்கெட்டிற்கு தன் அற்பணிப்பை தந்துள்ள சச்சின் டெண்டுல்கர் நிச்சயமாக ஒரு சாதனை வீரர்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

சுமாரான திறமைகளை மட்டுமே வைத்துக்கொண்டு கிரிக்கெட்டில் இடம் கிடைத்ததே என்பதற்காக தறிகெட்டு ஆடும் ஸ்ரீசாந்த் போன்ற பன்னாடைகளுக்கு மத்தியிலே..இருபது வருடங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் சாதனைகளுக்கு மேல் சாதனை புரியும் டெண்டுல்கர் பாராட்டுக்கு உரியவர்தான்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 166 டெஸ்டுகள் விளையாடி, 13447 (248 அதிகபட்சம்) ஓட்டங்கள், அதில் 47 சதங்கள், 54 அரைச் சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 441 மேட்சுகள் விளையாடி 17605 (200 அதிகபட்சம்) ஓட்டங்கள், அதில் 47 சதங்கள், 93 அரைச் சதங்கள் என்று எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நெருங்க முடியாத சாதனைகளைப் புரிந்தும் எந்த வித ஆணவமோ, அகம்பாவமோ, பெருமையோ கொள்ளாமல் விளையாடி வருவதால்தான் அவர் மேலும் மேலும் சாதனையாளராக இருக்க முடிகிறது.

இவரைபோன்ற விளையாட்டு வீரர்களால்தான் கிரிக்கெட்டை குறைகூறுபவர்கள் கூட ஆர்வமாக கிரிக்கெட் விளையாட்டை பார்கிறார்கள்..

ஆனால், ஸ்ரீசாந்த் என்கிற ஒரு பன்னாடை, இருக்கிற மரியாதை எல்லாம் கெடுத்துவிடுவான் போல இருக்கிறது.

ஒழுக்கமில்லாத பொறுக்கிகளை எல்லாம் எப்படித்தான் இந்த கிரிகெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ.

அப்படி ஒன்றும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை. எத்தனையோ வீரர்கள் போட்டிபோடும் இந்த விளையாட்டிற்கு, ஸ்ரீசாந்த் என்கிற பன்னாடையால் எந்த ஒரு பங்களிப்பையும் செய்ய முடியாது. கிரிக்கெட் மீது இருக்கிற மரியாதையைத்தான் கெடுக்க முடியும்.

கிரிக்கெட்டில் எல்லாரும்தான் விக்கெட் எடுக்கிறார்கள்..ஆனால் இவன் மட்டும்தான் பொறுக்கித்தனமாக நடந்து கொள்கிறான். (இவன்மேல் எனக்கு மட்டும்தான் கோவம் என்று நினைத்துகொண்டிருந்தேன்..ஆனால் என்னைவிட இவனை கேவலமாக திட்டுபவர்கள் அதிகம் என்று அறிந்தபோது இவனை பதிவில் திட்டுவதில் தவறில்லை என உணர்ந்துகொண்டேன்)

டெண்டுல்கர் போன்ற ஒழுக்கமானவர்கள் விளையாடும் இந்த விளையாட்டில் ஸ்ரீசாந்த் என்கிற களையை பிடுங்கி எறிந்தால்தான் இந்த விளையாட்டு உரிய மரியாதை பெரும் என்பதில் சந்தேகமில்லை.

மிகச்சிறந்த சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் மேலும் பல சாதனைகள் புரிந்து விளையாட பதிப்புலகம் சார்பில் வாழ்த்துவோம்..

என்னா வில்லத்தனம்?

என்னதான் விஷயம் ஒன்றுமில்லை என்றாலும் காலையில் தினத்தந்தி பார்க்கவே செய்கிறோம் (கவனிக்க : பார்க்கவே செய்கிறோம்..படிக்க அல்ல) அதில் கள்ளத்தொடர்பு, விபச்சார அழகிகள் போன்ற செய்திகள் சுவராஸ்யமானவைதான் ...(என்னடா பல்டி அடிச்சுட்டானேன்னு நினைக்கவேண்டாம்.)


தினத்தந்தி படிக்குபோது சில கேள்விகள் எனக்குள் எழும்.


கன்னித்தீவுக்கு படம் போடும் பாலன் என்பவருக்கு என்ன வயதிருக்கும் (அல்லது அவரும் சிந்துபாத் போலத்தானா...இன்னும் எதனை நூற்றாண்டுகளுக்கு வயதாகாமல் இருப்பாரு?)

சாணக்கியன் சொல் யாரு சொல்றது? (அந்த சாணக்கியன் எங்கே இருக்காரு?)

ஆண்டியார் என்ன கேரக்டர் ?

விபச்சாரிகளை அழகிகள் என்று அழைப்பது ஏன்?

அந்தரங்க உறவுக்கு உல்லாசம் என்று பெயர் வைத்தது யார்?

தெரிந்தே கெட்டுபோகும் பெண்களின் பெயரை மாற்றி போட்டு - பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அடைப்புக்குறிக்குள் போடுவது ஏன்?


யார் குற்றம் செய்தாலும்..முதலில் அவர்களது செக்ஸ் தொடர்பு பற்றியே கற்பனையாக எழுதுவது ஏன்?

இந்த கேள்விக்கு யாருக்காவது சரியான விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..உங்கள் பெயரில் ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்..

அப்புறம் "என்னா வில்லத்தனம்" - தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுவிடாதீர்கள்..ஹி ஹி சும்மா ஹிட்டுக்காகதான்!

புவி வெப்பமடைதலை தடுக்கும் செம்மறி ஆடுகள்!

புவி வெப்பமடைதலை தடுக்க உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் ரகசிய யுத்தம் இது.

பல்வேறு வழிகளில் புவி வெப்பமாவதை தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. செம்மறி ஆடுகளின் ஏப்பம், புவி வெப்பமாவதை தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது.

பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன.

குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன. மாடுகள் இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது.

தற்போது இந்தப் பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன.

செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள், மீத்தேன் வாயுவை அதிகமாக குறைக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது.

இதனால் குறிப்பிட்ட அளவில் காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு ஆடுகளில் பல்வேறு செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள ஆடுமேய்க்கும் இடையர்களையும் ஊக்குவித்து வருகிறார்கள்.

ஏனெனில் ஆடுகள் அதிகம் ஏப்பமிட்டால் நமக்கு ஏற்படும் ஆபத்து குறையுமே!

Tuesday, February 23, 2010

சாராய ஸ்பான்சர்கள்...



பழைய எம் ஜி ஆர் படங்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நமக்கெல்லாம் நன்றாகப்புரியும். மது, சிகரெட் போன்ற வஸ்துக்கள் நிச்சயமாக வில்லன்கள் மட்டுமே உபயோகிக்கக்கூடிய ஒன்று என்று.

ஆனால் அவருடைய போட்டியாளராக இருந்த சிவாஜி நல்லவனாக மட்டுமே நடிக்காமல் திருடனாக, குடிகாரனாக நடித்தார்.

ஆனாலும் பொதுவாக, கதாநாயகன், மற்றும் அவனுடைய ஆதரவாளனாக  வரும் காமெடியன் போன்றோர் நிச்சயமாக இதுபோன்ற செயல்கள் ஒரு தீயவன் மட்டுமே செய்யக்கூடியவை என்று வலியுறுத்தும் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்கள்.

தற்கால திரைப்படங்களைப் பார்த்தால் குடிப்பவன், திருடன், கற்பழிப்பு போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுபவன் மட்டுமே கதாநாயகன் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சொன்னால், கதாநாயகனாக வருபவன், வில்லனாக நடிப்பவனைவிட பலமடங்கு தீயவனாகவே இருக்கிறான்.

காதலில் தோற்றால் அவன் ஒயின் ஷாப் பக்கம் சென்று நன்றாக குடித்துவிட்டு (இவன் குடிப்பதுபோல் ஒரு முழு பாட்டிலையும் ஒரே மூச்சில் குடித்தால் அவனுக்கு பாட்டுபாட வேண்டியதுதான்) ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடியாகவேண்டும்.

காதலி வீட்டின் முன்போ, அல்லது காதலியின் முன்போ அவளையும் அவள் குடும்பத்தையும் தரக்குறைவாக பேசவேண்டும். (இதன்பிறகும் அவள் அவனைத்தான் விரும்புவாள்).

அப்புறம் கூட வரும் காமெடியன்கள்...இவன்கள் அறிமுகமே குடிகாரனாகவோ..அல்லது கதாநாயகனிடம் சாராயத்துக்காக இரந்து குடிப்பவனாகவோதான் வருகின்றார்கள்..


ஒருவேளை, கதாநாயகனோ, அல்லது இந்த காமெடியனோ சோற்றுக்கு வழி இல்லாதவனாக இருந்தால் தன் மானம் காப்பதில் ஒழுக்க சீலர்களாகவும், சாராயம் குடிப்பது அதுவும் ஓசியில் என்றால் மிக உரிமையாகவும் வாங்கி குடிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுக்கு அப்புறமும் இவர்களது கொண்டாட்டம் குடிப்பதில்தான் முடிகிறது.

கதாநாயகன் குடிகாரனாக இருந்தால் அவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, தந்தை அவனைகண்டிக்காமல் ஒரு நண்பனாக பழகுவதாகவும், இன்னும் சில படங்களில், தந்தையும் மகனும் சேர்ந்தே குடிப்பதாகவும் கேடுகெட்ட காட்சிகளை திணிக்கிறார்கள்.

அதுவே காமெடியன் என்றால் அவன் தந்தை படும்பாடு கேட்கவே வேண்டாம். தனது தந்தையின் குடும்ப பின்னணியையே கேவலமாக அந்த காமெடியன் பேசி நகைச்சுவை என்கிற பெயரில் கேவலமாக கூத்தடிக்கிறார்கள்.

மொத்தத்தில் சாராயம் குடிப்பது என்பது ஒரு தீங்கான, கொடிய செயலாகக்காட்டாமல், குடிகாரனாக இருப்பதுதான் ஒரு மனிதனுக்கு கவுரவம் என்பதுபோல்..சாராயத்துக்கு இலவச விளம்பரம் செய்யும் இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு, சினிமா ஒரு கருவியாக பயன்படுகிறது.

இந்த காமெடியன்களின் நகைச்சுவைக்காட்சிகள்தான் பெரும்பாலும்  டி விக்களில் நகைச்சுவைச் சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது. இதுபோன்ற காட்சிகளைத்தான் தாய்மார்கள் தமது குழந்தைககளையும் பார்க்கவைக்கிறார்கள்...சிறுவயதிலேயே இதுபோன்ற காட்சிகளைப்பார்த்து வளரும் குழந்தைகள்  இது போன்ற செயல்களால் தவறு ஏதும் இல்லை என்ற மனநிலையில்தான் பின்னாட்களில் வளரும் என்பதை நாம் அறியவேண்டாமா?

இதில், விவேக், கருணாஸ், கஞ்சா கருப்பு, வடிவேல் போன்ற கேடுகெட்ட நடிகர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

கலை என்கிற பெயரில் மக்களை படுபாதகத்தில் தள்ளும் இதுபோன்ற திரைப்படங்களுக்குத்தான், மத்திய அரசும், மாநில அரசும், விருதுகள் வழங்கி இவர்களை கவுரவித்துக்கொண்டிருக்கிறது..

சாராயத்தின் மூலம்தான் அரசுக்கு வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது என்பதற்காக மக்கள் நலனைப்பற்றி சிறுதும் கவலைப்படாமல் தெருவெங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

Sunday, February 21, 2010

நல்ல விசயமும் இருக்குதுல்ல...

நண்பர் திரு குலவுசனப்பிரியன் அவர்கள்..எனது முந்தைய பதிவுக்கான (அமெரிக்க அடிவருடிகள்) பின்னூட்டத்தில் தீமையைச் சாடும் நேரத்தில் நல்லதையும் போற்றலாமே என்று பதிந்திருந்தார்..(நன்றி நண்பரே)..

சாலை விதிகளை மதிக்காத மக்களின் போக்கை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். சாலை விதி மீறுவோர் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போமா?

1. சிக்னலுக்காக வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும்போது, பின்னாலிருந்து வண்டிகளுக்கிடையே புகுந்து புகுந்து மற்ற வண்டிகளை இடித்து முன்னுக்கு வந்து நிற்க முயற்சிப்பது. இப்படி நுழையும்போது எங்காவது ஒரு இடத்தில் சிக்கி மற்ற வண்டிகளுக்கும் இடைஞ்சலாய் நிற்பது.

2. க்ரீன் சிக்னல் விழுந்த திசையிலிருந்து வாகனங்கள் கிளம்ப ஒரு நொடி தாமதமானாலும், ரெட் சிக்னல் திசையில் உள்ளவர்கள் வண்டியைக்கிளப்பி விடுகிறார்கள். க்ரீன் சிக்னலை நம்பி வருபவர் காலி!

3. சிக்னலில் மஞ்சள் விழுந்ததும், நாம் நிறுத்த தயாரானாலும் பின்னால் வரும் வண்டிகள் மிரட்டல் ஹாரன் அடித்து நமக்கு பீதியை கிளப்புகின்றன. நாம் வண்டியை நிறுத்திவிட்டால் அவர்கள் வருகிற வேகத்தில் நம் மேலேயே ஏற்றிவிட்டு போய்விடுவார்கள் போல.

4. பஸ் டிரைவர்களுக்கு ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்த யாரவது சொல்லிக்கொடுக்க வேண்டும். மற்ற பஸ்கள் முந்திவிடக்கூடாது என்று சாலையை அடைத்துக்கொண்டு நிறுத்துகிறார்கள்.

5. வாகனங்கள் இடப்பக்கத்தில் முந்தக்கூடாது. (இந்தவிசயத்தில் மட்டும் ஓரளவு ஓகே) சின்சியராக ஹாரன் அடித்து தெரிவித்தபிரகுதான் இந்த விதி மீறலைச் செய்கிறார்கள்.

6. பின்னால் வரும் வாகனங்களைப்பற்றி கவலையேப் படாமல் "திடீர் ப்ரேக்" போட்டு ஆட்களை ஏற்றுவது ஆட்டோக்காரர்களுக்கு உரிய ஸ்டைல். கஸ்டமருக்கு முதல் மரியாதையாம்.

7. தங்கள் பேருந்துக்கு முன்னால் ஏதேனும் டூ வீலர் போனால் பல பஸ் டிரைவர்கள் ஏன் டென்சன் ஆகி, ஆக்சிலட்டரை அமுக்கி, உறுமி பயமுறுத்துகிறார்கள்? பின்னால் பஸ் வந்தாலே பயமாக இருக்கிறது.

8. மீடியனில் காத்திருக்கும் பாதசாரிகள் எல்லாரும் சாலையைக்கடந்து விட்டாலும், வண்டியை கிளப்பி விடக்கூடாது. கடைசியில் உதிரியாக ஒருவர் மட்டும் சாலையில் குதித்து, குடுகுடுவென சாலையைக்கடக்கிறார். பொது ஜனங்களில் பலர் மீடியன்மீது ஏறிக் குதித்து பயமுறுத்துகிறார்கள்.. இது அநியாயம்.

9. செல் போன் ஒரு பெரிய பிரச்சினை. இப்போது ப்ளு டூத் இருப்பதால் பலர் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறார்கள். இவர்களுக்கு உடனேயே லைசென்சை கேன்சல் செய்யவேண்டும்.

10. சென்னையில் பல நடைபாதைகளை கடைகள் அடைத்துகொண்டிருக்கின்றன. அப்புறம் மக்கள் எங்கே நடப்பார்கள். ரோட்டில்தானே? இதை எப்போது சரிசெய்வார்கள் என்று தெரியவில்லை...

தீமையைச் சாடும் நேரத்தில் நல்லதையும் போற்றுவோமே..அதுதான் இந்தவாரம் குமுதத்தில் "எப்போ திருந்துவாங்க" என்கிற தலைப்பில் சாலையோர பாதுகாப்பு மீறலில் நமது மக்களின் போக்கு பற்றி வெளியான கட்டுரை அப்படியே தந்திருக்கிறேன்.....

இவ்வளவும் சொல்லிட்டு நம்ம பன்ச் வெக்கலேன்னா எப்புடீ....


மேற்கண்ட சாலை விதிமீறல் கட்டுரையில் கூட குமுதம் தனது ஆபாச புத்தியை விடவில்லை...இந்தவிசயத்தை சொல்லகூட அவன் ரெண்டு மாடலிங் அழகிகளைத்தான் (அழகிகள் என்றால் தினத்தந்தியில் என்ன பொருள்?) கூட்டிச்சென்று இருக்கிறான்..

அந்த ரெண்டு ஐட்டமும் என்ன சொல்லி இருக்கு தெரியுமா? "நம்மாளுங்க எப்பதான் திருந்துவங்கன்னு தெரியல? " இதையேதான் கட்டுரையோட தலைப்பாகவும் கொடுத்து இருக்கான்..தமிழக மக்களை ரொம்பவும் கேவலமாக மதிப்பதால்தான் இவன் எந்த ஒரு விசயத்துக்கும் பெண்களின் படங்களை போடுகிறான்..


அப்புறம் இன்னொன்னு..இந்த டிராபிக் பத்தி இவ்வளவு சொன்னுச்சுங்களே இந்த மாடல் அழகிகள்..அவளுங்க ரெண்டுபேரும் டிராபிக் விதிய மதிக்காமல்தான் போஸ் கொடுத்து இருக்காளுங்க..அப்போ கூட ஹெல்மெட் போட்டுட்டு போகணும்கிற அறிவு இந்த ஜென்மங்களுக்கு இல்லை..இவளுங்கதான் (அல்லது அந்த குமுதம் காரனாகக்கூட இருக்கலாம்) "நம்மாளுங்க எப்பதான் திருந்துவங்கன்னு தெரியல? " என்று கமென்ட் அடிக்குதுங்க..
இந்த ஜென்மங்கள் எப்போதான் திருந்தப்போகுதோ?...

Saturday, February 20, 2010

அமெரிக்க அடிவருடிகள்



இந்தியாவைப்போல அமெரிக்காவும் ஒரு நாடு..பல்வேறு தரப்பட்ட மக்கள் அங்கு வசிக்கிறார்கள்..என்ன..இயற்கை அவர்களுக்கு சற்று சாதகமாக உள்ளது..

அதே செல்வங்களும் இயற்கை வளங்களும் நம் நாட்டிலும் உள்ளன..

ஆனால் நம்மிடையே உள்ள அடிமை புத்தி எல்லாவற்றையும் அமெரிக்க நாட்டுடனேயே ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது..

ஊடகங்கள் அமெரிக்க கைக்கூலியாக மாறி நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன..

எந்த ஒரு விசயமானாலும் அமெரிக்கர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் என்றும் அதனால்தான் அவன் இவ்வளவு வசதியாக வாழ்கிறான் என்றும் நம்மிடம் செய்திகளை திணிக்கிறார்கள் அந்த மூளைகெட்ட ஜென்மங்கள்..

இந்திய குடும்ப வாழ்க்கைமுறை, பண்பாடு கலாச்சாரம் போன்றவை எல்லா உலகமக்களாலும் விரும்பப்படுபவை..ஆனால் செல்வத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் மேலை நாட்டவரின் குடும்பம் பண்பாடு மற்றும் கலாசாரம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை மூளை உள்ள எவருமே ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

என்னதான் அவர்கள் செல்வச்செழிப்பில் வாழ்ந்தாலும், அங்கேயும் ஹோம்லெஸ் என்று அழைக்கப்படும் வீடில்லாதோர், திருடன், வழிப்பறி கொள்ளைக்காரன் போன்றோர் அங்கும் இருக்கவே செய்கின்றனர்..அங்கே குடும்ப வாழ்க்கை முறை கெட்டதால்தான், மதெர்ஸ் டே, பாதெர்ஸ் டே, அண்ணன் டே, தங்கச்சி டே, காதலர் தினம் இன்னும் என்னனமோ கருமாந்திர தினம் என்று கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். அதைத்தான் இங்கே காப்பியடித்து எல்லா நாசகார தினங்களையும் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு இங்கே (மேலும் அதிகமாக) குடிப்பதற்கு ஒரு தினம் வேண்டும்..

இங்கே யார் தனது தாயையும் தந்தையையும் மனைவி மக்களையும் வருஷக்கணக்கில் பிரிந்து இருக்கிறோம்?

நம் மக்களின் அடிமை புத்தி மேல் நாட்டவர்கள் என்று அழைக்கப்படும் அந்நியர்கள் எது செய்தாலும் அதில் ஒரு கவர்ச்சியை காண்கிறது.

டி வி க்களிலும்கூட உலகச்செய்தி என்று போடும்போது, அமெரிக்க கொடி, ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்க கட்டிடம் எதாவது ஒன்றைக்காட்டி உலகச்செய்தி என்கிறான்...ஏன் இந்தியா இந்த உலகத்திலேயே இல்லையா?

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் செய்திகளுக்கு இங்குள்ள டி.வீ க்களும் செய்திதாள்களும் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கே...ஏதோ இவங்களுக்கு இதனால் பெரிய புண்ணியம் என்பதுபோல் வரிந்துகட்டிக்கொண்டு செய்திகளைக்கொடுத்து மக்களை குழப்புவது..(அமெரிக்ககாரன் அமெரிக்காவுல ஜனாதிபதியவுறது அவ்வளவு கஷ்டமா?)

அப்புறம் சினிமாக்கூத்தாடிகள்..இவனுங்க பண்ற அநியாயம் இருக்கே..அமெரிக்ககாரன் சினிமா ஸ்டூடியோ வைத்து இருக்கும் இடம் பேர் ஹாலிவுட்..இவன் கோடம்பாக்கத்துக்கு கோலிவுட்டாம், பம்பாய்க்கு பாலிவுட்டாம் (மும்பைன்னு மாத்திட்டாங்களே.. அப்போ மூளிவுட்டா?) தெலுங்குக்கு டோலிவுட்டாம்.. அட வெக்கங்கெட்ட நாய்களா..உங்களுக்கு சொந்த அறிவு இல்லை?

இந்த ஆஸ்கார் விருது..ஏதோ கடவுளே கொடுக்கிறமாதிரி அவனவன். ஆஸ்கார் ஆச்காருன்னு அடிச்சுக்கிறானுங்க..அட மடப்பசங்களா இந்தியாவுல இந்த கூத்தாடிகளுக்கு, இங்குள்ள ஜனாதிபதி வேலையத்துப்போயி, சிறந்த நடிகன் சிறந்த நடிகைன்னு கொடுக்குரானுகளே..அது மாதிரி அங்கே உள்ள கூத்தாடிகளுக்கு அந்த நாட்டுக்காரன் கொடுக்கிற ஒரு விருது...அதுக்கு இங்கே உள்ள இந்த அடிமைகள் ஏன் அடிச்சுகிரான்னு தெரியல..இவனுங்கதான் தேச பக்தியப்பத்தி பக்கத்துக்கு பக்கம் வசனம் பேசிட்டு இந்திய நாடு தர்ற விருதைவிட அமெரிக்காகாரன் தர்ற விருதுக்காக படமெடுத்துக்கொண்டு இருக்கிறானுங்க..அவன் இவங்கள சீண்டுறதே இல்லை..(எ. ஆர் ரஹ்மானுக்கு கொடுத்த விருது அமெரிக்கா நாட்டுக்காரன் நம்ம நாட்டை கேவலப்படுத்தி எடுத்த படத்தில் இசையமைத்ததற்காக...அந்த இசைகூட விஜய் படத்தில் வரும் "எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே " என்ற பாடலின் ட்யூன் தான் - அப்போ அந்த இசையை இங்குள்ள எவனும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..அமெரிக்ககாரன் அவார்ட் கொடுத்தவுடன் என்னமா கொண்டாடுரானுங்க).

இப்படி சினிமாக்காரனுங்களும் மீடியாக்களும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை அமெரிக்கா அடிமையாக்க கைக்கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்கிறார்கள்..

நாமும் பல்லை இளித்துக்கொண்டு பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்..

இந்தப்பதிவு சுமார்தானே?


இன்று காலை அலுவலகம் வந்தவுடன் வேலையை தொடங்குமுன் ஒரு பதிவாவது பதிந்து விட்டு வேலையை தொடங்கலாம் (வேலை ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்) என்றுதான் வந்தேன்..

காலையில் குமுதம் பத்திரிக்கையை படிக்கும்போதே இன்னைக்கு குமுதத்தை ஒரு பிடி பிடிக்கலாம் என்றுதான் வந்தேன்..
பாருங்க..அட்டைப்படத்துல ஒரு நடிகையோட ஆபாசப்படம் (அட்டைல நடிகர் நடிகை படம்தான் போடணும் என்று இந்தியா பிரஸ் ரிஜிஸ்ட்ரார் எதாவது சட்டம் போட்டு இருக்காங்களா?) அதுலேயே சுருதி என்ற நடிகையின் பாய் பிரண்டைப் பற்றிய தலைப்பு...

சரி அட்டைதான் ஏதோ கவர்ச்சிக்காக போட்டு இருக்கான்னு பாத்தா..எல்லா பக்கமும் சினிமா சினிமாதாங்க..
அட்டைய திருப்புனவுடனேய ஒரு கவர்ச்சிப்படம்..ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்னவென்றால்..முன்னாள் நடிகை ராதாவின் மகள் செம ஹாட்டுன்னு ஒரு இயக்குனர் சொல்லி இருக்கான்..இதுதான் செய்தி..
இதை தெரிஞ்சு மக்களுக்கு என்ன யூசுன்னு கேக்குரீங்கள?
ஒருநாளைக்கு அவ வீட்டுக்குப் போய் நீங்க ரொம்ப ஹாட்டாம் .நானும் ஹாட்டுதான் வாங்க இன்னிக்கு என்கூட ஜாலிய இருக்கலாம்னு கேட்டு அவ வந்தா "பேமென்ட்டை" குமுதம் ஆபீஸ்ல கொடுத்துடலாம்..அப்படிதானே?

அடுத்த அடுத்த பக்கங்கள்? அசினோட கவர்ச்சி படம், சுருதியும் சித்தார்த்தும் லவ் பண்றது (குமுதம் வீட்டு பெண்கள் லவ் பண்ணா அதை செய்திய போடுவானா?) திரிஷா, இலியான போன்றவர்களின் ஆபாச படங்கள்..கிசு கிசு என்ற பெயரில் அடுத்தவனின் அந்தரங்கம், நடிகைகளின் படங்களை போட்டு அங்க அவயங்களை வர்ணிப்பது...ஹ்ம்ம் இப்படி எல்லாப்பக்கங்களும் ஆபாச குப்பைகளே மலிந்து கிடக்கிறது...இப்படி பத்திரிகை மூலம் மாமா வேலையை இவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்...இந்த அசிங்கம் பிடித்தவர்களால் எந்தவொரு மாற்றமும் நடந்து விடப்போவது இல்லை..

சரி விசயத்துக்கு வருவோம்..
ஐயோ இந்த செல் போனை கண்டுபிடித்தவன் யாரடா?

ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு நிம்மதியாக இருந்தோம்...
அப்பொழுதும் இது போன்ற வேலைகள் நடந்து கொண்டுதானிருந்தன..இந்த செல் போன் வந்தவுடன்..எவ்வளவு பொய்கள்..எவ்வளவு தொந்தரவுகள்..அப்பப்பா...
காலை அலுவலகம் வந்ததில் இருந்து எந்த வேலையும் பார்க்க விடாமல் தொடர்ந்து போன் வந்துகொண்டே இருத்தால் இன்று பதிவிடமுடியவில்லை...தப்பித்தோம் என்று பெருமூச்சு விடவேண்டாம்..

அடுத்த பதிவில் பிடுச்சுடுறேன்..ஓகேயா?

Friday, February 19, 2010

தமிழக முதல்வரும்..கூத்தாடிகளும்

இன்றைய மாலை நாளிதழ்களில் தலைப்புச் செய்திகள்..
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் தாக்குதல். ரஜினி மற்றும் அஜித்திற்கு கண்டனம்.
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிறகுதான் மேற்கண்ட இரண்டு நடிகர்களும் முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.

பெரும்பாலான நடிகர்கள் தற்போதைய முதல்வர்களை சந்தித்துவிட்டு வரும்போது மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு என்று சொல்கிறார்கள்...பத்திரிக்கைகளும் அதற்கு முக்கியத்துவம் வழங்கி செய்திகள் வெளியிடுகின்றன.
அதற்கு பின்னணியில் இது போன்ற ஏதோ ஒரு குற்றச்செயல்கள் நிச்சயமாக இருக்கின்றன எனபது முதல்வரை இந்த நடிகர்கள் சந்தித்துவிட்டு வந்த பிறகு செய்தித்தாள்களை பார்த்தாலே நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு பெரும் பொறுப்பில் இருக்கும் ஒரு முதல்வருக்கு, இந்த கூத்தாடிகளை சந்திப்பதே அன்றாட வேலையாகி விட்டது..

இவர்கள் ஒன்றும் புனிதமான ஆத்மா கிடையாது..ஒரு சினிமா நடிகனோ நடிகையோ..அவர்களது அந்தரங்கமும், கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்க்கையும் சராசரி மனிதனை விட மிக கேவலமான பக்கங்களை உடையதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு விபச்சாரியைக்கூட யாரும் நடு ரோட்டில் வைத்து கட்டிபிடித்து விடமுடியாது..அதற்கு அவளும் உடன்படமாட்டாள். அதற்கென்று ஒரு தனிமையான இடம் மற்றும் நேரம் இந்த நேரத்தில்தான் ஒரு விபச்சாரியுடன்கூட அந்தரங்க தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்..
ஆனால் ஒரு நடிகையை ஒரு நடிகன், 100 பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் சிறிதும் கூச்சமின்றி கட்டிபிடிக்கிறான் முத்தமிடுகிறான்..ஏன் முதலிரவு முடித்து குழந்தைகூட பெற்றுக்கொள்கிறான்.. இன்னும் சில இல்லை இல்லை..எல்லா நடிகைகளும் கதைக்குதேவைப்பட்டால் கவர்ச்சியாகவும், முத்தம் கொடுத்தும் நடிக்கத்தயார் என்று வெட்கமில்லாமல் ஆபாசபேட்டி அளிப்பதுண்டு..

தந்தை டைரக்சன் செய்யும் படத்தில் ஒரு மகன் இன்னொரு பெண்ணை தந்தை சொல்படி ஆபாசமாக பேசி கட்டிபிடிக்கிறான் (உதாரணம்:எஸ்.எ சந்திரசேகர், விஜய் மற்றும் டி.ராஜேந்தர் - சிலம்பரசன் ).. ஒரு படத்தில் தந்தையும் மகனும் ஒரு பெண்ணுக்காக போட்டி போடும் அவலம் (உதாரணம்:சத்யராஜ், சிபி). தந்தை தான் பெற்ற மகளையே இன்னொரு ஆணுடன் கட்டிபிடித்து நடிக்க சொல்லும் கேவலம் (உதாரணம்:பாக்யராஜ் - அவர் மகள்) இப்படி வெட்கங்கெட்டு திரியும் இந்த கூத்தாடிகளைத்தான் இந்த தமிழகமும் தமிழ் பத்திரிக்கைகளும் கலைஞர்கள் என்று கொண்டாடுகிறது. அவர்களது ஆபாசபடத்தை அட்டையில் போட்டுத்தான் தன் பத்திரிக்கை வியாபராத்தைகூட செய்கிறார்கள். இந்த கூத்தாடிகளினால் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் கிடையாது..மாறாக அவரகளது பணமும் நேரமும்தான் இவர்களால் திருடப்படுகிறது..

இப்படிப்பட்டவர்களைத்தான் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழக முதல்வர் (முதல்வர் அதே துறையில் இருந்து வந்தவர் என்றாலும்) தனது அலுவல்களை விட்டு இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். இந்த நடிகர்ளைப்போல ஒரு சாதாரண மனிதன் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு இந்த முதல்வரை அவ்வளவு சுலபமாக சந்தித்துவிட முடியுமா?

இவர்களை ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பது ஆபாச ஆட்டம் போட்டு கோடியில் புரளும் இந்த கூத்தாடிகளா அல்லது அப்பாவி நடுத்தர மக்களா?

சில கேள்விகள்!


முதல்வரின் அன்றாடப்பணிகள் :


நமது தமிழக முதல்வர் அவர்கள் தினமும் ஒரு அறிக்கை (தானாகவே தயாரித்துக்கொண்ட கேள்வி பதில் அறிக்கைகள் வேறு) விடுகிறார், பல்வேறு பாராட்டு விழாக்களில் கலந்து கொள்கிறார், சினிமாவிற்கு கதை வசனம் எழுதுகிறார், சம்மந்தப்பட்ட நடிக நடிகைகளை சந்திக்கிறார், வாரம் இரண்டு சினிமாக்கள் பார்த்துவிடுகிறார், அதைப்பாராட்டி பேட்டியும் அளிக்கிறார், புதிதாகக்கட்டப்பட்டு வரும் தலைமைச்செயலகத்தை அடிக்கடி பார்வை இடுகிறார், துணைவியார் வீட்டுக்கு செல்கிறார், அறிவாலயம் செல்கிறார், முரசொலியில் அன்றாடம் உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதுகிறார், கலைஞர் டி வியை நிர்வகிக்கிறார், அதில் மானாட மயிலாட போன்ற அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியை தினமும் பார்த்து ரசிக்கிறார், தினமும் சினிமாக்காரர்களை சந்திக்கிறார், அவர்களுக்கு எல்லா சலுகைகளையும் வழங்குகிறார் (கூடவே வயது முதிர்ந்த இரண்டு நடிகர்கள் - கமல் மற்றும் ரஜினி - இப்போது புதிதாக மம்முட்டியும்) அவர்களது எல்லா பிரச்சினைகளையும் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறார் (விபச்சார வழக்கு உட்பட)...

இப்படி சுறுசுறுப்பாக செயல்படுவதாக புகழப்படும் முதல்வரின் பணிகளில்..எங்காவது மக்கள் நலப்பணிகள் என்று ஏதாவது உண்டா...?

இருந்தா சொல்லுங்களேன்..ப்ளீஸ் !

குமுதத்தின் குறுக்கு புத்தி..


கடந்த இரண்டு வாரகாலமாக தமிழகத்தின் நம்பர் ஒன் ஆபாச புத்தகமான குமுதத்தில் நடிகர் ஜெயராம் என்பவரைப்பற்றி கண்டனக்கட்டுரைகள் வந்தவண்ணமாக இருக்கின்றன..என்னவென்றால் ஒரு டி.வீ. நிகழ்ச்சியில் அந்த நடிகர் தனது வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தமிழ் பெண்ணைப்பற்றி கிண்டலாக அவளைக் கறுப்பி என்று சொல்லிவிட்டாராம்...(தமிழகப் பெண்களில் யாருமே கருப்பாக இல்லை பாருங்கள்)..உடனேயே தமிழைக் காக்க புறப்பட்ட குமுதம் அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது..இதையே சாக்காக வைத்து, போனியாகாதப் படங்களைத்தந்து முகவரியற்று கிடந்த சீமான் என்பவன் அவர் வீட்டை தாக்கி அப்புறம் கம்பி எண்ணியது தனிக்கதை.

இதே தமிழ் சினிமாக்காரர்கள் மலையாளத்து பெண்களையும், தெலுங்குக்காரர்களையும் எவ்வளவோ கிண்டலடித்திருக்கிறார்கள்..அது இந்த தமிழினக்காவலர்களுக்குத் தெரியாதா...அல்லது அவர்கள் மனிதர்கள் இல்லையா?

சரி அப்புறம் நடிகர் ஜெயராம் வீட்டில் வேலை செய்த அந்தப் பெண்ணை அவர் அப்படி கிண்டலாக பேசி இருந்தாலும் அது அந்த நிகழ்ச்சியோடு போயிருக்கும்..அதை தமிழகம் முழுவதும் எல்லாருக்கும் தெரியப்படுத்தி..அந்த பெண்ணை மேலும் கேவலப்படுத்தி தன் வியாபாரத்தை பெருக்க அதை இந்த குமுதம் பயன்படுத்திக்கொண்டது..

அப்புறம் ஒரு கேள்வி..அந்த பெண்ணை நடிகர் ஜெயராம் இன்னமும் வேலைக்கு வைத்துக்கொண்டு இருப்பான் என்று எதிர்பார்க்கலாமா? அல்லது அந்த பெண்தான் இனிமேலும் அந்த வீட்டில் வேலை செய்வாரா?

எப்படியோ. தனது வியாபாரத்துக்காக ஒரு ஏழைப்பெண்ணை தமிழகமெங்கும் அவமானப்படுத்தி..அவள் எதிர்காலத்துக்கும் உலை வைத்தாயிற்று..

ஆனந்த விகடனின் அரைவேக்காட்டுத்தனம்


சினிமாவில் கூத்தடிப்பவனை எல்லாம் வி.ஐ.பி என்று கொண்டாடும் தமிழகத்தின் ஆபாச முகவரி ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை..

ஒரு நடிகர் (ரஜினி) இன்னொரு நடிகருக்கு (கமல்) ஒரு ஓவியம் பரிசாக வழங்கி இருக்கிறார்.. இதற்கு இந்த அரைவேக்காட்டு விகடன் அட்டைப்படத்தோடு செய்தி போட்டு கொடுத்து இருக்கும் தலைப்பு "உயிரைக்குழைத்து ஓவியம் வரைந்தேன்"

ஓவியம் வரைவதற்கு உயிரை எதுக்கு கொடுக்கணும்? ஒரு ஓவியனிடம் காசை கொடுத்து இந்த மாதிரி ஒரு ஓவியம் வரைந்து கொடு என்றால் வரையப்போகிறான். (அதைத்தான் அந்த நடிகனும் செய்து இருக்கிறார்). இப்படி ஒன்றுக்கும் ஆகாத விசயங்களை மக்களிடம் திணித்து அவர்களிடம் காசு பிடுங்கும் இந்த ஆபாச விகடனின் விலை 17 ருபாய்..ஒரு குப்பையை இவ்வளவு விலைகொடுத்து வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்..

எல்லா அசிங்கத்தையும் தனக்குள் வைத்திருக்கும் ஒரு கழிவறைதான் ஞாபகம் வருகிறது இந்த பத்திரிக்கைகளை பார்க்கும்போது.

சமன்பாடு

நிகழ்ச்சி 1.



நடிகர் ரஜினி என்பவர் தனது மகள் திருமண நிச்ச்சயதார்த்ததிர்க்காக (இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி போல அவன் அவன் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள் - ப்ளாக்கர்ஸ் உள்பட) அவரது தைரிய லெட்சுமி ஜெயலலிதாவை நேரடியாகவும், அன்றாடம் அவரையே (ரஜினியால் எவ்வளவு அவமானப்பட்டாலும்) புகழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத்தலைவர் (திரையுலகத்தின் தலைவர்கூடங்க) கருணாநிதியை, தனது குடும்பத்தார் மூலமாகவும் (இதற்கு விளக்கம் - சூரியன் அருகில் சென்றால் சுட்டு விடுமாம்) அழைத்தார்.

நிகழ்ச்சி 2.

சமீபத்தில் நடந்த திரைப்படத்துறையினர் நடத்திய முதல்வருக்கான பாராட்டு விழாவில் நடிகர் அஜித் நடிகர்களை விழாவில் கலந்துகொள்ள தம்மை மிரட்டினார்கள் என்று பேசி கைத்தட்டல் வாங்கிகொண்டார்..

நிகழ்ச்சி 3.

ரஜினியும் அஜித்குமாரும் நேற்று (18/02/2010) முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்... (செய்தி உபயம் மங்குனி அமைச்சர் - ஓகேயா மங்குனி அமைச்சரே)

நேற்று ரஜினியை சூரியன் சுடவும் இல்லை..அஜித்குமாரை யாரும் மிரட்டவும் இல்லை

Thursday, February 18, 2010

கிரிக்கெட் விளையாடாமலேயே சதம் அடித்து பெண் சாதனை...


இந்த செய்தி உங்களுக்கெல்லாம் நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும்..ஆனால் இது நிஜம்ங்க..
சவுத் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்திய சுற்றுபயணத்தின் பொது இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது..

இந்த போட்டியில் 30 பந்துக்கு அரை ரன் வீதம் எடுக்கும் வீரர் வி வி எஸ் லட்சுமணன் எப்படியோ தட்டுதடுமாறி 352 பந்துகளை சந்தித்து 143 ரன் எடுத்து விட்டார்...
கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே 16.2.2010 அன்று செவ்வாய் கிழமை, ஈடன் கார்டன் மைதானத்தில் இத்தனை ரன்கள் எடுத்து சாதனை புரிந்த ஒரே ஒருவர் இவர் மட்டும்தான்...இதற்கு முன் யாரும் இந்த நாளில் இந்த நேரத்தில் இத்தனை பந்துகளில் இத்தனை ரன்கள் எடுத்ததில்லை... பாவம் மனிதர் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த ரன்களை தன் மனைவிக்கு அர்பணித்து விட்டார்... எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள்..

இப்போ எனக்கு என்ன குழப்பம்னா இந்த சதம் மனைவிக்கு அர்பணித்து விட்டால்..வி வி எஸ் லட்சுமணன் கணக்கில் வருமா...இல்லை அவரது மனைவி கணக்கில் வருமா? அவரது மனைவி கணக்கில் வந்தால் அவர் இந்திய அணியில் இல்லையே..அப்போ இந்த ரன் இந்திய அணி கணக்கில் வராதா?

அப்படி அவர் மனைவி கணக்கில் எடுத்துக்கொண்டால் விளையாடாமலேயே சதம் அடித்தது ஒரு மாபெரும் சாதனை தானே?

இப்படி சாதனை புரிந்த பெண்மணிக்கு அர்ஜுனா, பாரத ரத்னா, பத்மபூஷன், போன்ற விருதுகளை கொடுத்து (நம்ம ஜனாதிபதிக்கு வேற என்ன வேலை) கவுரவிக்க வேண்டியதுதானே...

என்ன கொடுமைடா இது..

திரைப்படங்களின் தீராத தொல்லைகள்....


சன் டி வி வெளியிட்டிருக்கும் - இந்தியதொல்லைக்காட்சிகளில் திரைக்கு வரும் முன்னே டி வி இல் வெளிடப்படவேண்டிய - திரைப்படம் தீராத விளையாட்டுபிள்ளை என்ற திரைப்படம்...

இதற்கு கால் மணிக்கு ஒருதடவை விளம்பரம், பேட்டி என்று அவர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து டி விக்களிலும் விளம்பரம் தந்து மக்களை எவ்வளவு வெறுப்பேற்ற முடியுமோ அவ்வளவு வெறுப்பேற்றுகிறார்கள்..

சரி அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்குமோ என்று போய் பார்த்தால்...ஒரு ஹீரோ..(அவன பாக்கவே சகிக்கல)...அவனுக்கு ஜால்ரா போட என்றே மூணு அல்லக்கைகள்..லொட லொடன்னு பேசிக்கிட்டு....அந்த கதாநாயகன்..எத செலக்ட் பண்ணாலும் நல்லா டெஸ்ட் பண்ணி இருப்பதிலேயே பெஸ்ட் தான் செலக்ட் பண்ணுவானாம் ...(அவனோட அம்மா இவன பெத்து எடுக்கிறதுக்கு எத்தனை பேரை டெஸ்ட் பண்ணா என்கிற விவரம் திரைப்படத்தில் இல்லை)

இவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ன மூணு பொண்ணுங்கள செலக்ட் பண்ணி லவ் பண்றானாம்...அவனுக்கு கூட உள்ள அல்லக்கை நண்பர்கள் மாமா வேலை பார்கிறார்கள்... கடைசியில் அவனைப்பற்றி தெரிய வரும் அந்த மூணு பேரும் அவனை விட்டு பிரிந்த பிறகு இவன் காதலைப்பற்றி பீல் பண்ணி...வில்லன்களிடம் அடிவாங்கி (இப்படி அடிவாங்கி உயிர் பிழைக்கிறது இந்த தமிழ் சினிமா கதாநாயகர்கள் மட்டும்தான்) ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது மூணு பேரில் ஒரு பெண் வந்து அவனை ஏற்றுக்கொள்கிறாள்..
(அப்படியும் அந்த எருமை திருந்தின பாடில்லை..டாக்டராக வரும் இன்னொரு ஐட்டத்தை சைட் அடிப்பதாக படத்தை முடிக்கிறார்கள்)

இப்படிப்போகும் கருமாந்திரக்கதைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை...

படத்தில் வரும் கதாநாயகன் நான் எதை செலக்ட் பண்ணாலும் உள்ளதிலேயே பெஸ்ட் டைத்தான் செலக்ட் பண்ணுவேன் என்று அடிக்கடி சொல்றான்.. அப்படி உருப்படியான ஆளாக இருந்திருந்தால் நல்லா கதையை செலக்ட் பண்ணி இருப்பான்...

மக்களை இப்படி முட்டளாக்கிக்கொண்டு இருப்பதால்தான் இவனைப்போன்ற "பில்ட் அப்" பார்ட்டிகள் தொடர்ந்து தோல்விப்படங்களாக தந்துகொண்டு இருந்தாலும்...இன்னும் திருந்தினதாக தெரியவில்லை...

Wednesday, February 17, 2010

சாருலதா ஐ பி எஸ்சும் தமிழ் பத்திரிக்கைகளின் வியாபாரமும்!


நமது தமிழ் பத்திரிக்கைகளின் சமீபத்திய வியாபாரம்..சாருலதா என்கிற போலி ஐ பி எஸ் பற்றி..நீங்களும் அதைப்பற்றி பரபரப்பாக படித்து இருப்பீர்கள்..விறுவிறுப்பாகவும் சுவராஸ்யமாகவும் எழுதி இருப்பார்கள் (அவங்களுக்கு வேற என்ன சமூக அக்கறைன்னு கேக்குறீங்களா?..அதுவும் சரிதான் - அதுக்காக நம்ம வேலைய நிறுத்திட முடியுமா....?)

இப்போது அந்த பெண்ணைப்பற்றி பரபரப்பாக செய்தி போட்டு காசு பார்க்கும் பத்திரிக்கைகைகள் இன்னும் அடுத்த ஒரு அசிங்கமான வியாபாரம் வந்த பிறகு இதை மறந்து விடுவார்கள்..

வாரம் மற்றும் வாரம் இருமுறை வரும் (பலான) பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் போன்ற எழுத்து வியாபாரிகள் என்ன செய்வார்கள் என்று பார்போமா?

நக்கீரன் - இவளது வாழ்க்கை வரலாறு என்று சில அந்தரங்க அசிங்கங்களை (கற்பனையாக) வெளியிட்டு காசு பார்த்து, கடைசியில் இவள் சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் இப்படி மாறினாள் என்று எழுதுவான்.

ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் - சிறுவயதிலேயே இவள் மிகவும் புத்திசாலிப்பெண் என்றும், ரஜினி ரசிகை என்றும் (கெட்டவனோ நல்லவனோ - யாரவது பிரபலமாகிவிட்டால் அவனை ரஜினியுடன் சம்மந்தப்படுத்திப்பார்ப்பதில் இந்த விகடன் குரூப்புக்கு அப்படி என்ன சந்தோஷமோ?) எழுதி அவள் செய்கையை நியாயப்படுத்துவதுபோல் இவளிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் இதற்குக்காரணம் என்று முடித்துவிடுவான்..

குமுதம் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் - இவன் உள்ளதிலேயே இவளது கவர்ச்சியான படத்தைப்போட்டு தனது அரிப்பை தீர்த்துக்கொண்டு , இப்போது இவள் ஆன்மீகத்தின் பக்கம் திருந்திவிட்டால் என்று, இவள் இப்படி ஆனதற்கு சமூகம்தான் காரணம் என்றும் குற்றத்தை சமூகத்தின் பக்கம் திருப்பிவிடுவான்

கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி இவளுக்கு பெரிய அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் அந்தரங்க தொடர்பு ஏற்படுத்தி சந்தோசமடைவான்.

அரசு விசாரணையும் இவளைசுற்றியே நடைபெறும்...

அப்புறம் இவளிடம் போலிஸ் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவர்களும் பத்திரிக்கைகளுக்கும் டி வீ களுக்கும் பேட்டி கொடுத்து தனது ஏமாளித்தனத்தை பறைசாற்றிக்கொள்ளுவான்.

அது இருக்கட்டும்...

எனது கேள்வி என்னவென்றால் ..இவளிடம் போலிஸ் வேலைக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு இப்போது புகார் கொடுத்து இருக்கும் அதி மேதாவிகளைப்பற்றிதான்...

லஞ்சம் கொடுத்து போலிஸ் வேலைக்கு செல்ல ஆசைப்படும் இவர்கள் யோக்கியமானவர்களா?

இந்த பெண்ணைப்பற்றி சரியாக விசாரிக்காமலேயே யாரோ ஒரு அதிகாரியுடன் பார்த்ததை வைத்து மட்டும் அவளை நம்பி பணம் கொடுத்த இவர்கள் போலிஸ் வேலைக்கு லாயக்கானவர்கள்தானா?

ஏமாற்றியதற்காக இந்த பெண்ணை கைது செய்து இருக்கும் போலிஸ், லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக இவர்கள் மீது அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

மனிதனை மனிதனாகப் பார்க்கலாம்..நடிகர்களை?



சமீபத்தில் நடிகர் அஜித் அளித்த பேட்டி இப்போது பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்து பார்த்து இருக்கலாம்...

சினிமாக்காரன் பேட்டி (பெட்டி) என்றால் எதையும் யோசிக்காத நமது ஜனநாயகக்காவலர்களான நமது தமிழ் பத்திரிக்கைகள் ஏதோ அபூர்வமான பேட்டி போல ஆளாளுக்கு அட்டைப்படத்துடன் தலைப்புசெய்தியாக வெளியிட்டு மகிழ்ந்து கொண்டார்கள்..மற்றும் தமது வியாபாரத்தையும் பெருக்கிக்கொண்டுவிட்டர்கள்..

செய்தி ஒன்றுமில்லை..." நடிகனையும் மனிதனாக பாருங்கள்" இதுதான் அந்த நடிகர் சொன்னது.. இதுக்கு என்னமோ ஒரு அதிசய பொன்மொழிபோல .."தல உருக்கம், மற்றும் கால் கை, கண்ணு உருக்கம் எனபது போல ஏகப்பட்ட பில்ட் அப் வேறு...
சரி அவர் சொல்வது போல நடிகனை மனிதனாகவே பார்க்கலாம்.....எப்போது..?

நீ ஒரு மனிதன் போல நடி..அப்போது உன்னை ஒரு மனிதனாக பார்க்கிறோம்...

திரைப்படங்களில் உங்களைப்போன்ற நடிகர்களை ஈசியாக மிரட்டிவிட முடியுமா? இவர்தான் முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறார் தம்மை விழாக்களுக்கு வருமாறு மிரட்டல் வந்தது என்று..ஆயிரம் பேர் வந்தாலும் ஒரு ஆளாக நின்று விரட்டி அடிக்கிறீங்க...(அது என்னப்பா எத்தனை பேர் அடிக்க வந்தாலும்..மொத்தமா வர்றது இல்லை..தனித்தனியாத்தான் வந்து அடிவாங்கிட்டு போறானுங்க) எந்த எடத்துக்கு போனாலும் உன்னை யாரும் வெல்ல முடியிறது இல்லை...உங்களமாதிரி வெத்துவேட்டு நடிகனுங்க படங்களை (நான் அஜித்தை மட்டும் குறிப்பிடவில்லை..அவரைப்போல உள்ள எல்லா நடிகர்களையும்தான்) பாத்துட்டு உங்க கட் ஒவுட்டுக்கு பூஜை பண்றது பாலபிஷேகம் பண்றது எல்லாம் அடித்தட்டு மக்கள்தான்...
சாலையோரங்களில் வசிக்கும் படிப்பறிவு இல்லாத, தினமும் குடித்துக்கொண்டு பொறுக்கித்தனம் செய்யும் மக்கள் (மாக்கள்)தான் உங்கள் படங்களை பார்த்து விட்டு, மேலும் பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் செய்துகொண்டு இருக்கிறார்கள்...

கதாநாயகன் எவ்வளவுதான் பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் செய்தாலும்..அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து அவன் நல்லதுக்காகத்தான் அப்படி செய்தான் என்று பார்க்கும் மக்களை முட்டாள்களாக்கி.. தமது ரசிகனை மேலும் மேலும் பொறுக்கித்தனம் செய்யத்தூண்டும் இவர்கள் என்று மனிதனாக திரையிலும் நடிக்கிறார்களோ அப்போது உங்களை நாங்கள் மனிதனாக பார்க்கிறோம்..

அதுவரைக்கும்....நீங்களே உங்கள் வில்லன்களைப்பார்த்து சொல்வதுபோல்..."பொத்திக்கிட்டு இரு"

Monday, February 15, 2010

என்ன எழுதலாம்?


நானும் எழுதப்போறேன்... நானும் எழுதப்போறேன்..

சிறுவயதில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைத்து நெறைய திரும்பி வந்துடுச்சு...
அப்போ நீங்க எல்லாம் தப்பிச்சு இருக்கலாம்..ஆனா இப்போ முடியாது..
நீங்கல்லாம் படிச்சுதான் ஆகனும்ங்க...

சரி என்னதான் எழுதலாம்னு பாத்தா..பாவிங்க எல்லாத்தையும் எழுதி வெச்சு இருக்கீங்க . என்னதாம் பண்ணலாமுன்னு யோசிச்சேன்...

திட்ட வேண்டியதுதான்.....

எல்லாரையும் சகட்டுமேனிக்கு திட்டலாம்னு முடிவுபண்ணிட்டேன்....

எதுலேருந்து ஆரம்பிக்கிறது....?...யோசிச்சு பாத்தேன்..இப்போ மக்களை ரொம்ப கெடுத்துக்கிட்டு இருக்கிற விஷயம் என்னன்னு பாத்தா ..சினிமா, டிவி, அப்புறம்...ஏதோ நாலாவது தூணுன்னு பீத்திக்கிட்டு அலையிரானுன்களே ...அந்த பத்திரிக்கைங்கதாங்கோ...

பிடிச்சுடலமா ஒரு பிடி?

முதல்ல யாரு..எந்த பத்திரிக்கை? ....சரி நான் ஒரு லிஸ்ட் போடுறேன்..பாருங்க..

சந்தனக்கடத்தல் வீரப்பனை ஹீரோவாக்கிய நக்கீரன், ஆட்டோ சங்கரை நண்பனாக்கிய ஜூனியர் விகடன், அறுபது வயது ரஜினிக்கு சின்ன சின்ன நடிகைகளை ஜோடியாக்க ப்ரோக்கர் வேலை பாக்கும் குமுதமும் ஆனந்த விகடனும்.. அப்புறம்...கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் மற்றும் விபச்சாரிகளை அழகிகளாக்கும் தினத்தந்தி, .இப்படி நெறைய இருக்குங்க ...டெய்லி ஒவ்வொரு பக்கம் பற்றியும் எழுதினாக்கூட நெறைய கிழிக்கலாம்..இந்த பத்திரிக்கை விபச்சாரத்தை பத்தி..

அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதான்..

அடுத்த பதிவுல டீட்டைலா கிழிப்போம்ல ....